Monday, November 26, 2007

செய்தி: மாணவி மீது கத்திக்குத்து!

தொழில்நுட்பப் பயிற்சி வகுப்புக்கு சென்று திரும்பிய மாணவி ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி ஆபத்தான நிலையில் பதுளை வைத்தியசாலை அதிவிசேட சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்।இச்சம்பவம் நேற்று முன்தினம் மாலை லுணுகலையிலுள்ள அடாவத்தை தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.இந்தத் தோட்டத்தைச் சேர்ந்த சிவநாதன் பவானி (வயது 20) என்பவரே கத்திக்குத்துக்கு இலக்கானவராவார்.இச்சம்பவம் தொடர்பாக லுணுகலைப் பகுதியைச் சேர்ந்த யப்பாமை அரச பாடசாலையின் காவலாளியான சுந்தரம் விநாயகமூர்த்தி என்பவரை, அப்பகுதி மக்கள் பிடித்து, லுணுகலைப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.லுணுகலைப் பொலிஸ் பிரிவிலுள்ள இச் சந்தேக நபருக்கும், கத்திக்குத்திற்கிலாக்கான மாணவிக்குமிடேயே ஏற்கனவே கருத்து முரண்பாடுகள் இருந்துவந்தன எனவும், இதையடுத்து இச் சந்தேகநபர் தொழில்நுட்பப் பயிற்சி வகுப்பிற்கு அம்மாணவியை செல்லவேண்டாமென்று தடை விதித்தார் எனவும், இத் தடையை மீறி அம் மாணவி வகுப்பிற்குச் சென்று திரும்பியபோதே, இம் மாணவி கத்திக்குத்திற்கு இலக்கானார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள இந்த மாணவியின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது எனவும் இந்த மாணவியின் உடம்பில் நான்கு பெரிய கத்திக்குத்து காயங்கள் உள்ளன எனவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.