Sunday, May 3, 2009

"எமது பிணத்தின் மீது தேரினை செலுத்துங்கள்" - இன வெறியர்கள்

இறக்குவானை மகோற்சவம் நிறுத்தப்பட்ட சம்பவம்
பேரினவாதிகளால் தொடரும் அச்சுறுத்தல்


வடக்கு கிழக்கில் அல்லது கொழும்பில் பாரிய தாக்குதல் சம்பவங்கள் இடம்பெறும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் இரத்தினபுரி மாவட்டத்தில் ஒரு தமிழராவது தாக்கப்படுவது வழமையாகிவிட்டது. பெரும்பான்மை விஷமிகளின் துவேச எண்ணங்களும் தமக்கு அடிமையாய் தமிழர்கள் இருக்கவேண்டும் என்ற விடாப்பிடியான நிலைப்பாடும் அவர்களை விட்டகல்வதாய் தெரியவில்லை.

தொடரும் பெரும்பான்மையின அச்சுறுத்தல்களின் மற்றுமொரு அவலம் இறக்குவானையில் நடைபெற்றுள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலிலே மிகப் பிரசித்தி பெற்ற இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மகோற்சவம் சிங்கள இனவாதிகளால் தடுக்கப்பட்டமை தமிழ்பேசும் மக்களிடையே கவலையையும் வெறுப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

ஒவ்வொரு வருடமும் குறித்த அதே திகதியில் மகோற்சவம் மிகச்சிறப்பாக நடைபெறுவது வழமை. இறக்குவானை நகரைப் பொருத்தவரையில் தேர் பவனி மற்றும் ஆலய உற்சவங்களில் பெருந்திரளானோர் கலந்துகொள்வர். இந்நிலை தொடருமானால் சிங்களவர்களின் ஆதிக்கத்துக்கு பிரச்சினை ஏற்படும் என எண்ணி கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ச்சியாக ஆலயத்துக்கும் ஆலய நிர்வாக்தினருக்கும் சிக்கல்களை ஏற்படுத்தத் தொடங்கினர்.

கடந்த வருட மகோற்சவப் பெருவிழாவின்போது ஒலிபெருக்கிகளை உபயோகித்தால் அவற்றை உடைத்தெறிவோம் என அச்சுறுத்தியதால் ஆலய நிர்வாக வேண்டுகோளின்பேரில் அவை உபயோகிக்கப்படவில்லை. ஆயினும் வீதியெங்கும் கட்டப்பட்ட வாழைமரங்களும் தோரணங்களும் பெரும்பான்மையினத்தவரால் அழிக்கப்பட்டன.

இவ்வருடம் ஏப்ரல் 28 ஆம் திகதி கொடியேற்ற நிகழ்வுடன் ஆலய மகோற்சவம் ஆரம்பிக்கப்படவிருந்தது. எனினும் கடந்த 26ஆம் திகதி ஆலய முன்றலில் கூடிய பெருந்திரளான சிங்களவர்கள் ஆலயத்தை உடைக்கப்போவதாகவும் தமிழர்கள் அனைவரையும் விரட்டியடிக்கப்போவதாகவும் கோஷம் எழுப்பினர்.

“திருவிழாவை நடாத்த புலிகள் பணம் கொடுக்கிறார்கள். இது எங்களுக்கு சொந்தமான நாடு. நாம் சொல்வதைத்தான் கேட்க வேண்டும்” என அதிகாரத் தோரணையில் சத்தமிட்டவர்களின் கண்களில் இனவெறி தெரிந்தது.

பின்னர் பொலிஸார் சமாதானப்படுத்தினர். தேர்த்திருவிழா நடைபெறும் தினத்தில் பூரண பொலிஸ் பாதுகாப்பு வழங்குவதாக உறுதியளித்தனர். எனினும் பொலிஸார் இருக்கும்போதே தமிழர்கள் இருவர் தாக்கப்பட்டதாக இறக்குவானை மக்கள் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும், “உங்களுடைய ஆலயத்திலிருந்து தேர் புறப்படுமானால் அது எமது பிணங்களின் மீதுதான் செல்லும். முடியுமானளவு தமிழர்களை கொன்றுவிட்டுத்தான் நாமும் சாவோம்” என அதன் பின்னர் ஆண்கள் பெண்கள் என நு}ற்றுக்கணக்கானோர் மீண்டும் ஆலயத்திற்கருகில் கூடினர். ஆலய தலைவரையும் பொருளாளரையும் தாக்கவேண்டும் என இரண்டு குழுக்கள் அங்கிருந்து பிரிந்து சென்றனர்.

இந்நிலையில் அவசரமாக கூடிய ஆலய நிர்வாகம் மகோற்சவத்தை நிறுத்துவதென முடிவு செய்தது. சுமார் 40 ஆயிரம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மாபெரும் பெயர்த் பதாகை இளைஞர்களால் அகற்றப்படும்போது அனைத்து தமிழர்களின் கண்களிலும் நீர் நிரம்பியது. பெரும்பான்மையினத்தவர்கள் தமது நோக்கம் நிறைவேறியதாய் குது}கலித்தனர்.

இறக்குவானையில் தமிழ்,கிறிஸ்தவ, முஸ்லிம் இளைஞர்களுக்கிடையே புரிந்துணர்வும் ஒற்றுமையும் இருக்கிறது. மகோற்சப் பெருவிழாவின் போது ஏனைய மத இளைஞர்களே பெரும்பாலும் வேலைகளில் ஈடுபட்டிருந்தனர். சிங்கள மக்களின் ஆவேசத்திற்கு இதுவும் காரணமாக இருக்கலாம்.

கொழும்பில் தாக்குதல் சம்பவங்கள் இடம்பெறும் வேளையில் இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள தோட்டத் தொழிலாளர்கள் தாக்கப்பட்டு வருகின்றனர். பம்பேகம, நிவித்திகல, பொத்துப்பிட்டிய, எந்தானை, கலவானை ஆகிய தோட்டங்களிலுள்ள மக்கள் இந்த அச்சுறுத்தல்களுக்கு தொடர்ந்தும் முகங்கொடுத்து வருகின்றனர். பொத்துப்பிட்டிய தோட்டப்பகுதிகளில் தமிழர்களை அடிமைகளாக்கி தமது தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்ளும் அரக்கப்போக்குடைய சிங்களவர்கள் இன்னும் தமது ஆதிக்கத்தை செலுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

இது பற்றி அனைத்து ஊடகங்களிலும் செய்திகள் வெளிவந்தபோதும் சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. பாரியளவில் சொத்துக்கள் சேதமாக்கப்பட்ட பம்பேகம தோட்ட மக்கள் இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை.

எந்தானை தோட்டப்பகுதியில் தமிழ் மக்களிடம் பலவந்தமாக பணம் வாங்கும் அவல நிலையை போக்க யாரும் முன்வரவில்லை. அந்தப் பகுதியினு}டாக செல்லும் பஸ் வண்டிகள் அடிக்கடி இடைமறிக்கப்பட்டு தமிழர்கள் தாக்கப்படும் சம்பவங்களும் அங்குள்ள ஆலய சொத்துகள் களவாடப்படுவதும் தொடர்கதையாகியுள்ளது.

இறக்குவானைப் பகுதியில் இவ்வாறான நிலை காணப்பட்டபோதிலும் சிங்களவர்களால் பெரிதாக ஒன்றும் சாதிக்க முடியாமல் இருந்தது. ஆனால் இம்முறை ஒன்றுதிரண்டு தாமே பெரியவர்கள் என்று இனத்துவேசத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இதில் மிகக் கேவலமான விடயம் என்னவென்றால் அப்பகுதி பிக்குமார் இணைந்து இதற்கு முன்மாதிரியாய் விளங்கியதுதான். அன்பை, அஹிம்சையை போதிக்கும் மதகுருமார் அன்றைய தினம் இனத்துவேசத்தை மேலும் ஆதரித்துப் பேசிக்கொண்டிருந்தனர். தாங்கள் முதல் தடவையாக வெசாக் வாரம் கொண்டாடவிருப்பதாகவும் ஆலய தீர்த்தம் நடைபெறு

இந்தப் பிரச்சினை தொடர்பாக இந்துகலாசார அலுவல்கள் திணைக்களத்திற்கும், ஜனாதிபதிக்கும் எழுத்துமூலம் அறிவிக்கப்படவுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.

ஒருபுறம் யுத்தத்தின் கோரப்பிடியிலிருந்து மீளமுடியாமல் தமிழர்கள் தவித்துக்கொண்டிருக்க மறுபுறம் இனத்துவேச வலையில் சிக்கி பல்வேறு இன்னல்களை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் இவ்வாறான சம்பவங்களை தடுக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பாரா? ஒருதாய் மக்கள் என்ற ஜனாதிபதியின் பிரசாரம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியதன் கட்டாயம் உணரப்பட வேண்டும்.

மக்கள் பிரதிநிதிகள் என அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பொறுப்புள்ளவர்கள் கூட இவ்விடயத்தில் பின்நிலை நோக்கத்தில் இருப்பது கண்டிக்கப்படவேண்டியதுடன், மக்களின் பாதுகாப்புக்கென அமர்த்தப்பட்ட பொலிஸார் பாரபட்சமற்று செயற்படவேண்டியது வலியுறுத்தப்படவேண்டும்.

இந்த மதம் பெரியது, இந்த மதம் சிறியது என்று இல்லை. ஒவ்வொரு தனி மனிதனும் மற்றையவரின் மதத்துக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும். மதங்கள் கோட்பாடுகள் வேறுபடினும் அதன் ஆழ்கொள்கையும் வலியுறுத்தல்களும் ஒன்றாகவே இருக்கின்றன. அவற்றை அதற்குரிய மதத் தலைவர்கள் போதனை செய்வார்களா?

மதத் தலைவர்களின் தவறான வழிகாட்டுதல்களால் பாரது}ரமான எதிர்விளைவான சிந்தனைகளை மக்கள் மத்தியில் விதைக்கப்படுகின்றன.

எவ்வாறாயினும் இரத்தினபுரி மாவட்டத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான கீழ்த்தரமான, இனத்துவேசத்தை து}ண்டிவிடக்கூடியவகையில் செயற்படுபவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். அவ்வாறில்லாவிடின் அதன் பின்விளைவுகள் தொற்றுநோய்போல் பரவக்கூடிய அபாயமும் உண்டு.

-இராமானுஜம் நிர்ஷன்
நன்றி வீரகேசரி வாரவெளியீடு -03.05.2009