Thursday, November 1, 2007

இது அமைச்சர் சொன்னதுப்பா!


இலங்கை மலையகத்தின் கட்சியொன்றிலிருந்து பிரிந்துசென்று அமைச்சுப்பொறுப்பை ஏற்றுக்கொண்டு புதிய தொழிற்சங்கமொன்றையும் ஆரம்பித்துள்ள அமைச்சர் ஒருவர் அண்மையில் பாடசாலையொன்றில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றினார்। அவரது உரையிலுள்ள சில முக்கிய தகவல்களை மக்கள்(அவர்) அறிந்துகொள்ள வேண்டியவற்றை தருகிறேன்।


*எமது சமூகத் தலைவர்கள் மத்தியில் போட்டி, பொறாமை, பிரிவினைகள் தலைதூக்கியுள்ளன।இந்நிலை மாறவேண்டும்। எம்மிடையே ஒன்றுபட்ட சக்தி வலிமைபெறவேண்டும்.

* எம்மவர் மத்தியில் காட்டிக்கொடுப்புகள், பழிவாங்கல்கள், போட்டி, பொறாமைகள் தொடர்கின்றன. இத்தகைய செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும் .

* தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் ஏனைய பிரச்சினைகளுக்கும் பாரம்பரிய நிலையை விட்டு நவீன முறையில் தீர்வினை ஏற்படுத்துவேன்।

* தோட்டத் தொழிலாளர் பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டிருப்பதற்கு நான் இடமளியேன்। அவர்களின் பிரச்சினைகள் உடனுக்குடன் தீர்க்கப்படல்வேண்டும்.

* அன்று தொட்டிருந்து எமது தலைமைகள் செய்த தவறுகளினாலேயே எமது நிலையில் மாற்றங்களைக்காண முடியவில்லை। இன்னும் அந்த நிலை தொடர்ந்த வண்ணமாகவேயுள்ளது. தனக்கு இருகண் போனால் பரவாயில்லை. மற்றவனுக்கு ஒரு கண்ணாவது போகவேண்டு மென்ற நிலையிலேயே எமது தலைமைகள் உள்ளன.

* எமது சமூகத்திற்கு எதிரி வெளியிலிருந்து வரத் தேவையில்லை। நமக்கு நாமே எதிரிகளாக இருந்து வருகின்றோம்.


நல்ல விடயங்களைத்தான் ஐயா கூறியிருக்கிறீர்கள்। இவற்றில் சில விடயங்களை நீங்கள் கண்ணாடி முன் நின்று கூறிப்பார்க்கவும் மறந்துவிட வேண்டாம்। தலைமை தவறு செய்வதாக ஒப்புக்கொள்கிறீர்களானால் நீங்களும் தவறுசெய்கிறீர்கள் என்பதை மறக்கவேண்டாம்.

4 comments:

Anonymous said...

hee....heee...

இறக்குவானை நிர்ஷன் said...

சிரிப்புக்கு நன்றி பைத்தியம்.

Anonymous said...

ur service is great
aanal muthalil makkali sinthika vaiungal

இறக்குவானை நிர்ஷன் said...

ஆமாம் கவி. அதுவும் எங்களுடைய பொறுப்புதான். அதற்காக எல்லாரும் ஒன்றிணையவேண்டியது அவசியமாகும்.