Friday, June 20, 2008

இலங்கை யுத்தம் சாதிப்பிரச்சினையை இல்லாமல் செய்ததா?

குறிப்பிட்ட சில நண்பர்களுடன் சேரும்போது சில காத்திரமான விடயங்கள் பற்றிக் கலந்துரையாடுவதுண்டு।அவ்வாறு எமக்குள் பரிமாறப்படும் பல தகவல்கள் இதுவரை அறிந்திராத புதியனவற்றை புகுத்துவதாக இருந்துள்ளதையும் நான் உணர்ந்திருக்கிறேன்।
யுத்தத்தினால் பொதுமக்களுக்கு ஏற்படும் உளத்தாக்கங்கள் பற்றி நண்பர் ஒருவருடன் நேற்றுமுன்தினம் வாதித்துக்கொண்டிருந்த போது அவர் சொன்ன கருத்து இதுதான்।
யுத்தத்தில் எத்தனையோ பிரதிவிளைவுகள் ஏற்படுகின்றன என்பது உண்மை। ஆனால் இலங்கையில் குறிப்பாக ஈழத்தில் சாதிப் பிரச்சினை ஒழிவதற்கு யுத்தம் பிரதான காரணமாக இருந்துள்ளது। வெவ்வேறு சாதிப்பிரிவினரிடையே புரிந்துணர்வை ஏற்படுத்தியது என்று தனது வாதத்தை தொடங்கினார்। யாழ் தீவுப் பகுதியைச் சேர்ந்த அந்த நண்பர்சொன்ன தகவல்கள் அறியும் ஆவலை என்னுள் தூண்டின।
சாதி மோகம் என்று யாராவது பேசினால் எதிர்த்து நாலு வார்த்தை கேட்டுவிட வேண்டும் என்பதுதான் எனது ஆவல்। ஆனால் நண்பர் கூறிய சில கருத்துக்கள் என்னை யோசிக்க வைத்தன। இந்தளவுக்கு, ஏன் இப்படியும் இருந்ததா என சிந்தித்தேன்।
அவர் சொன்ன கருத்துக்கள் இதுதான்।
ஈழப் போராட்டம் ஆரம்பிக்கும் முன்னர் வடபகுதியில் பல்வேறு சாதிப்பிரிவுகள் இருந்தன। அந்தப் பிரிவினையால் பூதாகரமான பிரச்சினை உருவாகி கொலைக்கலாசாரம் நிலவியதும் உண்டு। தீண்டாமை உட்பட கீழ்சாதிக்காரனின் வயலில் கால்வைத்து நடந்து சென்றால் கூட மறுபுரத்தில் சுடுநீரும் மஞ்சளும் கலந்து நீராடித்தான் செல்வது வழக்கம் என்ற சாதியினரும் இருந்தனர்। மீனவர்களை, குயவர்களை, தொழிலாளர்களை மதிக்காதவர்கள் ஏராளமாக இருந்தனர்। ஆனால் என்று ஈழப் போராட்டம் தொடங்கியதோ அன்றிலிருந்து இந்தச் சாதிப்பிரச்சினை குறைந்தது। இப்போதும் இல்லை என்றில்லை। ஆனால் ஓரளவுக்கு குறைந்திருக்கிறது।
போராட்டத்தின் போது அதிலும் குறிப்பிட்ட சில காலப்பகுதிக்கு பின்னர் இயக்கத்தில் சேர்ந்தவர்கள் சாதி பார்க்கவில்லை। அதிலும் சாதி என்ற ஒன்றுக்கு இயக்கத்தால் தடைவிதிக்கப்பட்டது। தமது சாதியினரின் நிலங்களுக்கு மட்டும் வேற்று சாதியினரின் நிழல்,காற்று கூட படாமல் பலர் பாதுகாத்து வந்தனர்। யுத்தத்தால் இடம்பெயர இடம்பெயர அவர்களது பேராசையில் மண் விழுந்தது।
ஈழமண் என்ற எண்ணம் பலரிடையே துளிர்விட ஆரம்பித்தபோது சாதிக்கு இடமில்லாமல் போனது। எனினும் இன்னும் பலர் சாதி சாதி என அலைந்து கொண்டிருக்கிறார்கள்। சாதி என்று பார்த்து நாற்பது வயது வரை தமது மகளை திருமணம் முடித்துக்கொடுக்காதவர்கள் இருக்கிறார்கள்। என்னதான் இழப்புகள் ஏற்பட்டாலும் சாதி பிரச்சினை குறைந்தது இந்த யுத்தத்தால் தான்। அப்படி இல்லாவிடின் சாதி என்ற பெயரால் ஈழமே பிளவுபட்டு மக்கள் பிரிவுகள் பல உண்டாகியிருக்கும் என்றார்।

ஆம்... இதுபற்றி நிறைய ஆராய வேண்டும்। எனக்கு அந்தளவுக்கு தகவல் தெரியாது। மலையகப் பகுதிகளைப் பொருத்தவரையில் சாதி என்று பார்க்கப்பட்டாலும் அது பெரிதாக பேசப்படுவதில்லை। வறுமை,ஏழ்மை என்பன அவற்றை மறக்கவைத்துவிட்டன।
இந்த நண்பர் குறிப்பிட்டதைப் போல யுத்தம் இல்லாவிட்டால் சாதிமுறையால் எமது சமுதாயம் பிளவுபட்டிருக்குமா என்ற கேள்வி எழுகிறது। பதிவர்களே பதில் தெரிந்தால் சொல்லுங்கள்।

ஈழத்தில் (எனக்குத் தெரிந்தவரையில்)
அம்பட்டர்,
இடையர்,
கடையர்,
கரையார்,
கன்னார்,
கள்வர்,
குயவர்,
குறவர்,
கைக்கோளர்,
கொல்லர்,
கொத்தர்,
கோவியர்,
சக்கிலியர்,
சான்றார்,
சிவியார்,
செட்டியார்,
சேணியர்,
தச்சர்,
தட்டார்,
தவசிகள்,
திமிலர்,
துரும்பர்,
நளவர்,
பரதேசிகன்,
பரம்பர்,
பரவர்,
பள்ளர்,
பறையர்,
பாணர்,
பிராமணர்,
மடைப்பள்ளியர்,
மறவர்,
முக்கியர்,
வண்ணார்,
வேளாளர்,
இத்தனை சாதிப்பிரிவுகள் (இன்னும் இருக்கலாம்) இருந்துள்ளன। இப்போது எவ்வாறான நிலை இருக்கிறது என்பதை யாழ் நண்பர்கள் தான் சொல்ல வேண்டும்.

39 comments:

Anonymous said...

நிர்ஷன், அப்போ மட்டுமில்ல இப்பவும் இருக்குது. அந்தக்காலத்தில தன் சாதி உயர்ந்தது என்று தம்பட்டம் அடிக்கும்போக்கு இருக்குதே. ஐயோ அது கொடுமையிலும் கொடுமை. ஏன் இப்போ கூட அடுத்தவர் வீட்டில சாப்பிடாத கூட்டம் இருக்குது. கல்யாண வீட்டுக்கு போனா கூட ஹால் ல னாலும் சாப்பிட மாட்டாங்க.

யுத்தத்தால் தான் இப்போ குறைஞ்சிச்சென்டு நான் சொல்ல மாட்டன்.

சண்சுதா said...

வணக்கம் நிர்ஷன், அநேகரைப்போலவே உங்களுக்கும் இந்த மயக்கம் உள்ளது. சாதியத்துக்கு எதிரான போராட்டம் இனப்பிரச்சனை தொடங்குவதற்கு நீண்டகாலத்துக்கு முன்னரே தொடங்கி வெற்றிபெற்றும்விட்டது. எனினும் அவ்வரலாறு மறக்கப்பட்டு சாதியம் ஒழிந்ததுக்கு காரணம் இன விடுதலை போராட்டமே இப்போது பேசப்படுகிறது. சாதியம் மீள்கட்டியமைக்கப்படுவதை தடுத்ததில் இன விடுதலை போராட்டத்துக்கு பெரும் பங்கிருப்பதை மறுக்கமுடியாது.
சாதியமும் அதற்கெதிரான போராட்டமும் என்ற நூல் அண்மையில் வெளியிடப்பட்டது. (புதியபூமி வெளியீட்டகம்) வெகுஜனன், இராவணா என்கிற இருவர் (இப்போராட்டத்தில் பங்குகொண்ட தோழர்கள்) இந்நூலை எழுதியிருந்தனர். இப்போது வெளியிடப்பட்டது இரண்டாவது பதிப்பாகும். முடியுமானால் இந்நூலை படித்துப்பார்க்கவும்.


சாதியப்போராட்டம்- சில குறிப்புகள்
http://noolaham.net/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

சண்சுதா said...

ஐயா பெயரிலி, சாதி அட்க்குமுறை என்பது இப்போது எவ்வளவோ அற்றுப்போய் விட்டது. இப்போதெல்லாம் சாதிப்பெயரை சொல்ல்வது அநாகரிகம் ஆகிவிட்டது. அதற்காக நான் சாதி ஒழிந்துவிட்டதென்று சொல்லவரவில்லை. காட்டுமிராண்டித்தனமான சாதி அடக்குமுறையிலிருந்து ஓரளவேனும் மீண்டுவிட்டோம். இன்னும் பயனிக்கவேண்டிய தூரம் நிறைய... சாதியத்தை மீள்கட்டியமைக்கும் பணி புலம்பெயர் நாடுகளில் மும்முரமாக நடைபெறுவதாக கேள்வி?

Unknown said...

நிர்ஷன். எனது கணவர் யாழ்ப்பாணத்தை சொந்த இடமாகக் கொண்டவர். சிறுவயதிலேயே அங்கிருந்து வந்துவிட்டாலும் சுவடுகளை மறக்காதவர். நீங்கள் குறிப்பிட்ட அனைத்து சாதியினரும் இருந்திருக்கிறார்கள். யாழ் சந்தையில் மீன் வாங்கினால் அவருடைய கை மற்ற சாதிக்காரின் உடம்பில் பட்டுவிட்டதே என்று மீனவரை அடித்து உதைத்த கதையெல்லாம் சொல்லியிருக்கிறார். இப்போது வெளிநாட்டில் அவர் இருக்கிறார். அங்கும் இவ்வாறு சாதி்ப்பிரச்சினைகள் உள்ளதாக கூறியிருக்கிறார். இவ்வளவுதான் எனக்குத் தெரியும்.

யாருக்கும் பயப்படாதவன் said...

வலைப்பக்கங்களை கடந்தசில வருடங்களாக பார்த்து வந்தாலும் எனது முதல் பின்னூட்டம் இதுதான்.

சண்சுதா கூறியதை நான் ஏற்றுக்கொள்ளவே மாட்டேன். இந்தப் பின்னூட்டத்துக்கு காரணம் அவருடைய கருத்துதான். சாதியப்போராட்டம் விடுதலைப்போராட்டத்துக்கு முன்னர் வெற்றி பெறவில்லை. வடமராட்சியிலிருந்து நாங்கள் பருத்தித்துறைக்கு வந்தபோது பட்ட பாடு இருக்கிறதே. பதிவர்களும் எவரும் எதனையும் கூறலாம். அடிபட்டவர்களுக்குத்தான் தெரியும். இவர்களின் பார்வையில் நான் கீழ்சாதித்தான். ஆனால் மனதால் உயர்ந்தவன். எழுதப்படிக்கத் தெரிந்த காலம் முதல் சுந்தரமூர்த்தி வாத்தியாரிடம் கற்ற காலம் முதல் வெளிநாடடுக்கு செல்ல வேண்டும் என கொழும்புக்கு வந்த காலம் வரை நிறையவே அடிபட்டிருக்கிறேன். இந்த சாதிய வெறி இன்னும் இருக்கிறது. ஏன் இத்தனை இராணுவத்தினரிடம் அடிபட்டு சோற்றுக்கு வழியில்லாதவர்கள் கூட மற்றசாதிக்காரன் பக்கத்திலிருக்கிறான் என தள்ளி நிற்பார்கள். இதனை சண்சுதா விளங்கிக்கொள்ள வேண்டும். இன்னும் சொல்வேன். நிறை அனுபவங்கள் இருக்கின்றன.

(கட்டாயம் பிரசுரியுங்கள் தம்பி)

பகீ said...

நிர்ஷன்,

நீங்கள் குறிப்பிட்டவற்றை விட அதிகமான சாதிகள் மற்றும் கிழைச்சாதிகள் யாழ்ப்பாணத்தில் இருந்திருக்கின்றன. அவைபற்றி பிறிதொருமுறை சந்தர்ப்பம் கிடைத்தால் சொல்கிறேன்.

சாதீயம் தொடர்பான பிரச்சனை நீண்ட காலத்துக்கு முன்னரே தொடங்கி சாதீயம் இல்லாது போய்விட்டது என்கிற சண்சுதாவின் கருத்து அவரின் தெளிவின்மையை காட்டுகிறது. சாதீயத்திற்கு எதிரான போராட்டம் ஆரம்பமானதையெ அவர் குறிப்பிடுகிறார் தவிர அது வெற்றி பெறவில்லை.

இனப்பிரச்சனை சாதீயத்தை இல்லாதொழித்து விட்டது என்பதும் சரியான கருத்தல்ல.

சரியாக கூறவேண்டுமென்றால், இனப்பிரச்சனை சாதீயப்பிரச்சனையை மறைத்து வைத்திருக்கிறது. அவ்வளவுதான். நீண்டகாலமாக மறைக்கப்பட்டிருப்பதால் அதன் தீவிரம் குறைக்கப்பட்டிருப்பதும் உண்மை.

இன்னமும் கோயிலுக்குள் போக அனுமதி மறுக்கப்பட்டவர்களும், பாடசாலையில் கடைசி வரிசையில் அமர்த்தப்படுபவர்களுமாக சாதீயம் யாழப்பாணத்தில் இருக்கின்றது என்பது உண்மை.

இந்த உதாரணங்கள் மிகக்குறைவெனினும் சாதி பாக்காத கலியாணம் ஒண்டு நடந்தாலே பெரிய விசயம்.

கனக்க சொல்ல ஆசை ... பிறகொருக்கா ஏலுமெண்டா வந்து சொல்லுறன்....

தமிழரங்கம் said...

http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=467:2008-04-17-06-36-48&catid=71:0103&Itemid=76




கருத்து மக்களைப் பற்றிக் கொண்டால் அது மாபெரும் சக்தியாக உருவெடுக்கும்


வர்க்கம், அரசியல், சாதியம், பெண்ணியம், தேசியம், நிறம், மதம், பண்பாடு, கலாச்சாரம், இசை, சுற்றுச்சூழல் … என அனைத்து விடையங்களையும் இத்தளத்தில் நீங்கள் காணமுடியும்.




மாற்றம் என்பதே மாறாதது









* புதிய கலாச்சாரம்
* புதிய ஜனநாயகம்
* சமர்
* நிழற்படங்கள்
* தொடர்புகளுக்கு


முன்பக்கம் பி.இரயாகரன் 2001-2003 புலிகளும் சாதீயமும்
நுழை வாசல்கள்

* முன்பக்கம்
* பி.இரயாகரன்
* கட்டுரைகள்
* புதிய ஜனநாயகம்
* புதிய கலாச்சாரம்
* சமர் இதழ்கள்
* இணைப்புக்கள்
* நிழற்படங்கள்
* ஆவணங்கள்
* அறிவியல்
* பாடல்கள்

முன்னைய தளம்
Banner
உலாவுவோர்
 120 guests


உலாவியோர்
: 55593

புலிகளும் சாதீயமும் PDF Print E-mail
பி.இரயாகரன் - 2001-2003
Written by பி.இரயாகரன்
Tuesday, 01 July 2003 07:30

"நான் இன்றும் மார்க்ஸீயவாதியே" தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆசானக் கவிஞர் புதுவை இரத்தினதுரை சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டி இது. தமிழீழ விடுதலைப் புலிகள் தமது முதலாவது கொள்கை அறிக்கையில் சோசலிச தமிழீழமே எமது இலட்சிய தாகம் எனப் பிரகடனம் செய்தனர்.

அதையே தமது சொந்தக் கைகளால் புதைகுழிக்குள் அனுப்பிய வரலாற்றை தெரிந்து கொள்ள விரும்பாத மந்தைக் குணம் கொண்ட தமிழ் சமுதாயத்தில் தான், புதுவை இரத்தினதுரை கதை சொல்லுகின்றார். தமிழ் மக்களை மட்டுமல்ல, சிங்கள மக்களின் காதுக்கும் பூ வைக்க முனையும் ஒரு மோசடி தான் இது. அன்று அன்ரன் பாலசிங்கம் ரொக்சிய கட்சியில் இருந்து பெற்ற திரிபுவாத அரசியலை அடிப்படையாகக் கொண்டு, புலிக்கு இடதுசாரிச் சாயம் பூச முயன்றவர். புலிகளின் கொள்கை வகுப்பாளராக தன்னைத் தான் பாராட்டிக் கொண்டவர். தளத்தில் புலிகளின் கொள்கை வகுப்பாளராக இருந்த மு.நித்தியானந்தன், புலிகளின் பத்திரிகையில் சொந்த நடைமுறைக்கு புறம்பாகவே மாவோவின் மேற்கோள்களை அச்சிட்டு இடது சாயம் தெளித்து மக்களை ஏமாற்ற முயன்றவர். புலிகளுக்கு ஒரேயொரு ஆயுள் தலைவர் இருப்பது போன்று, கொள்கை வகுப்பாளரும் ஒரேயொருவர் மட்டுமே இருக்க முடியும் என்ற அடிப்படையில், மு.நித்தியானந்தன் கழித்து விடப்பட்டார். இதனால் புலி எதிர்ப்பாளராக வெளிவந்த மு.நித்தியானந்தன், காலத்துக்கு காலம் புலியின் நிலைக்கு ஏற்ப தாளம் போட்டு தனது பிழைப்புக்கு ஏற்ற நிலைப்பாட்டை நடத்தி வருகின்றார்.



இந்த வரிசையில் புதுவை இரத்தினதுரை "நான் இன்றும் மார்க்சியவாதியே" என்று கூறுவதன் மூலம், நக்கிப் பிழைக்கும் தனது நிலைப்பாடு சார்ந்து தான் இருக்கும் அமைப்பை மார்க்சிய இயக்கமாக சித்தரித்துக் காட்ட முனைகின்றார். பிழைப்புத் தனத்தின் கடைக் கோடியில் நின்று இப்படி புலம்புவது நிகழ்கின்றது. 1960 களில் நடந்த சாதியப் போராட்ட வரலாற்றில் அதற்கு ஆதரவாக இருந்த இவர், அதையே மார்க்சிய போராட்டமாக சித்தரிப்பது ஒரு விசித்திரமான விடையம். சண் தலைமையிலான கட்சி முன்னெடுத்த சாதிப் போராட்டமோ, ஒரு வர்க்கப் போராட்டம் அல்ல. வர்க்கப் போராட்டத்தின் உள்ளார்ந்த ஒரு அம்சம் மட்டும் தான். அடிப்படையில் ஒரு ஜனநாயக கோரிக்கை மட்டும் தான். சண் தலைமையில் நடந்த போராட்டம், வர்க்க அடிப்படையிலான கட்சியை கட்டுவதிலும் சரி, வர்க்கப் போராட்டத்தை நடத்துவதிலும் சரி இதில் எதையும் முன்னெடுக்கவில்லை. மாறாக பொருளாதார போராட்டங்களை வர்க்கப் போராட்டமாக காட்டி, வர்க்கப் போராட்டத்தை திசை திருப்பிச் சீரழித்தனர்.



அன்றைய ஜனநாயக போராட்டத்தில் கலந்த கொண்ட புதுவை இரத்தினதுரை, ஒடுக்கப்பட்ட சாதியின் ஒரு உறுப்பினர் என்ற வகையில் இந்த நிலைப்பாட்டை எடுத்து இருந்தார். அதை மார்க்சியமாக நம்பியதும், அதையே மார்க்சியமாக விளக்குவதும், இதுவே அவரின் சித்தாந்தமான போது இயல்பில் புலிகளில் இணைவதை நியாயப்படுத்தியது. ஜனநாயகக் கோரிக்கையில் நிற்கும் ஒருவன் நிலைமைக்கு ஏற்ப ஊசலாடுவது, புதுவை இரத்தினதுரைக்கு விதிவிலக்கல்ல. இந்த நிலையில் தான் புதுவை இரத்தினதுரை, ஜனநாயகக் கோரிக்கையை கைவிட்டு வலதுசாரிகளான புலிகளில் இணைந்தார். வலதுசாரிக் கருத்துக்காக தன்னையும் தனது தோலின் நிறத்தையும் மாற்றிக் கொண்டதுடன், அவர்களின் கருத்துகளையும் அச்சடித்தது போல் பிரச்சாரம் செய்தவர். அன்றாட நிலைமை சார்ந்து வலதுசாரிய கருத்தின் அப்படையில் பல கவிதைகளை புனைந்தவர். இந்த கவிதைகளில் அவர் முன்னர் போராடிய சாதிய அம்சத்தை மருந்துக்கு கூட இணைக்கத் தவறியவர். பிழைப்புக்கும் அந்தஸ்துக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டு, மக்களின் தியாகங்களை கேவலப்படுத்திய ஒருவரே புதுவை இரத்தினதுரை.



பிழைப்புக்கு சோரம் போன புதுவை இரத்தினதுரை நேரத்துக்கும் இடத்துக்கும் ஏற்ப கவிதை பாடியவர். புலிகளின் தளத்துக்கு ஏற்ப அதற்கு இசைந்து பாடியவர். சொந்த உணர்வில் இருந்து கவிதை படிக்கவில்லை. புலியின் உணர்வுக்கு ஏற்ப கவிதை படித்தவர். மக்களின் அடிப்படை உணர்வு சார்ந்த ஜனநாயகத்தை ஏறி மிதிப்பதில், தன்னைத் தான் இசைவாக்கியவர். புலம்பெயர் சமூகம் பற்றிப் பாடிய கவிதை ஒன்றை உதாரணத்துக்கு எடுப்போம்.



".. பெற்ற தாயினை எட்டி உதைப்பது போல
தாயகம் தீயில் எரிகையில் விட்டு
விமானத்தில் ஏறி பறந்தவர்
வீரம் இல்லாதவர் நாயிலும் கீழானவர்
சுற்றி வளைத்தனர் சிங்களப் படையினர்
சுட்டுத் தள்ளுவர் என்ற பயத்தினால்
விட்டுப் பறந்த கோழைகள் நாளையே
வீடு திரும்பினால் காறியே துப்புவோம்
கப்பல் ஏறி ஜெர்மன், பிரான்ஸ் உடன்
கனடா நாட்டிலும் தஞ்சம் புகுந்தனர்
அப்பு ஆச்சியை கவனம் கவனம் என்று
அங்கேயிருந்துமே கடிதம் எழுதினர்
தப்பிப் பிறந்தவர் தம்பியும் வாவென
தம்பிமாரையும் அங்கு அழைத்தனர்
துப்புக் கெட்டவர் அகதி லேபலில்
தூசு தட்டியே காசு பிழைத்தனர்
ஓடியவர் ஓடட்டும் ஊழைச் சதையர்
எல்லாம் பேடியர்கள் ஓடட்டும் போனவர்
போகட்டும் பாய்விரித்தால் போதும்
படுதுறங்கும் இவர்கள் எல்லாம் நாய்சாதி
நாய்சாதி ஓடி நக்கிப் பிழைக்கட்டும்
தப்பிப்பறந்து தமிழன் என்று சொல்ல வெட்கி
கப்பலிலே எறி கனடாவில் நக்கட்டும் .."



என்று அன்று பாடியவர். இன்று அதுபற்றி வழங்கிய பேட்டியில் என்ன சொல்லி நக்குகின்றார் எனப் பார்ப்போம். "கவிதை எழுதுவதற்காக அந்த நேரத்தில் நான் பெற்றுக் பெற்றுக் கொண்ட மன உணர்வின் வெளிப்பாடு.... அப்போது போராளிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்த சமயத்தில் பெருவாரியான இளைஞர்களின் இடம்பெயர்வு எனக்குக் கோபத்தை தந்தது. அதே புலம்பெயர்ந்த தமிழர்கள் இப்போது புகலிட நாடுகளிலிருந்து உணர்வு குன்றிவிடாமல், எமது போராட்டத்தைத் தாங்குவதில் பெரும் பலமாக இருக்கின்றார்கள்." என்று இன்று நக்கிப் பிழைத்தபடி பினாற்றுகின்றார். இன்று வெளிநாட்டில் உழைத்து வாழும் மக்களின் பணத்தில் நக்கிப் பிழைக்கின்ற நிலைக்கு புலிகள் தங்கி இருப்பதால் தான், இந்த குத்துக் கரணம். பணம் தருவதைத் தான் கவிஞர் உணர்வு குன்றாதவர்கள் என்கின்றார். பணத்துக்காக தன் நிலைப்பாட்டையே மாற்றிவிடும் இந்தக் கவிஞர், பணத்தை பாயாக விரித்தால் அதையே புணரக் கூடியவர் தான் என்பதை சொல்லாமல் இருக்க முடியவில்லை. இது கவிஞரின் இன்றைய உணர்வு.



அன்று எண்ணிக்கை குறைந்த நிலையில் தான், இப்படி தூற்றியதாக ஒப்புக் கொள்ளும் இவர் அதை அன்றைய உணர்வு என்கின்றார். அந்த உணர்வு சார்ந்து வெளிநாடு சென்றவர்களை பயந்து பறந்தோடிய கோழைகள் என்று காரணத்தை கற்பிக்கின்றார். உண்மையை புதைகுழிக்கு அனுப்பிவிட்டு அதை துப்பாக்கி முனையில் பாதுகாத்தபடிதான் தூற்றமுடிகின்றது. நாட்டை விட்டு புலம் பெயர்ந்தவர்கள் பயந்து ஒடும் கோழைகள் என்பதாலா, நாட்டை விட்டு வெளியேறினர். இல்லை ஒரு நாளும் இல்லை. தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் கொண்டிருந்த மக்கள் விரோத அரசியலே, புலம் பெயர வைத்தது. பிரதானமானது தேசிய பொருளாதார கொள்கை தொடர்பானது. இரண்டாவது மக்களின் ஜனநாயக உரிமை தொடர்பானது. இந்த இரு பிரதான காரணத்தினாலும் தான் புலம் பெயர்வு ஒரு விதியாகியது. இன்று வன்னியை விட்டே வெளியேற முடியாத பாஸ் நடைமுறை மூலமே, வன்னியில் இருந்து மக்கள் வெளியேறுவதை புலிகள் கட்டுப்படுத்துகின்றனர். சொந்த தேசிய அரசியலால் அல்ல.



வெளிநாட்டை நோக்கிய புலம் பெயர்வில் பொருளாதார ரீதியான தனிமனித முன்னேற்றம் சார்ந்த அன்னிய மோகம், தேசத்தின் தேசியத்தின் அடிப்படைப் பண்பாக கொள்கையாக இருக்கும் வரை, எதையும் தூற்ற புலிகளுக்கு எந்த தார்மிக பலமும் கிடையாது. மக்களிடம் இருந்து அன்னியப்பட்ட இளைஞர் குழுவாக, மக்களின் அடிப்படை வாழ்வியலுடன் ஒன்றிணையாத நிலையில், அதற்கு எதிராக செயற்பட்டபடி உருவான ஒரு இயக்கமே. இந்த இயக்கம் இராணுவ தாக்குதலை நடத்திவிட்டு கோழையைப் போல் ஒடி ஒழித்துவிடும் நிலையில், அருகில் உள்ள கிராமங்களை சிங்கள இராணுவத்தின் சூறையாடலுக்கு உள்ளாக்குவதே ஒரு போராட்டமாகியது. தாக்கியவன் கோழையைப் போல் பயந்து ஒடி ஒழித்துவிடும் போது, தாக்குதலுக்கு உள்ளாகும் மக்கள் அங்கிருந்தும் அந்த மண்ணில் இருந்தும் தப்பியோடுவது ஒரு இயங்கியல் விதி.



இதில் பொருளாதார ரீதியாக ஒரு சாண் வயிற்றுக்கு வழி காட்ட முடியாத தேசிய பொருளாதார கொள்கையை பிரகடனம் செய்யும் (இன்று தேசியத்தை அழிக்கும் ஏகாதிபத்தியத்திடம் கையேந்தி நிற்கின்றனர்) புலிகளின் அதிகாரத்தில், சொந்த மண்ணை விட்டு சிங்கள தேசம் நோக்கிய புலம் பெயர்வும், அங்கிருந்தும் புலம் பெயர்வையும் புலிகள் தான் ஊக்குவித்தனர். இது மட்டுமா இல்லை. புலிகள் ஜனநாயகத்தை மக்களுக்கு மறுத்து அதன் தொடர்ச்சியில் அனைத்து அரசியல் அமைப்புகளையும் வேட்டையாடிய போது, ஈவிரக்கமற்ற படுகொலைகளே தேசிய அரசியலாகியது. இந்த நிலையில் மற்றைய அரசியல் பிரிவுகளும், இயக்க ஆதரவாளர்களும் அவர்கள் குடும்பத்தினர் முதல் கொண்டு அனைவரும் படுகொலைகளில் இருந்து தப்ப புலம் பெயர்வை ஒரு நிபந்தனையாக்கினர். எப்படி வாய் மூடி மக்கள் செம்மறிகளாக வாழ வேண்டும் என்பதை புலிகளின் உத்தியோகபூர்வமாக அன்று வெளியிட்ட கருத்தில் நாம் காணமுடியும். "40 வயதிற்குக் கீழ்ப்பட்டவர்கள் ஆயுதம் ஏந்திப் போராட வேண்டும். 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் விமர்சனங்களை நிற்பாட்டிவிட்டு உங்களுடைய வாய்களை முடி வைத்துக் கொள்ள வேண்டும்." என்று புலிகளின் மத்திய குழு உறுப்பினர் யோகி கூறியதில் இருந்தே புதுவை இரத்தினதுரை கவிதையின் கருவைத் தேடியவர். இதை அவர் தாண்டவில்லை. சாமி சரணம் போட்டபடி வாயை உண்பதற்கு மட்டும் திறக்க கோரியவர்களுக்கு, அவற்றை இசையாக்கியவர். மக்களுக்கு கருத்து, எழுத்து, பேச்சு சுதந்திரம் வழங்கினால், புலிகள் அரசியல் அனாதைகள் ஆகிவிடுவர்கள் என்று தலைவரின் பெயரில் துண்டுப் பிரசுரம் போட்டு, அந்தத் தளத்துக்கு ஏற்ற மெட்டில் தான் இன்று புதுவை இரத்தினதுரையின் சொல் அலங்காரங்களும், அவரின் பிழைப்புச் சார்ந்த செழிப்பும் உயிர் வாழ்கின்றது. மக்கள் மக்கள் என்ற ஒப்பாரிகளும் தொடருகின்றது. எல்லாம் புலிமயமாகி அதுவே துப்பாக்கியின் ஒரேயொரு மொழியான நிலையில், வாய் மூடிய சமுதாயத்தில் பலவீனமான சமூக அறிவியலில் பின் தங்கிய பெண்கள், இளம் குழந்தைகள் புலிகளின் ஆதார சக்தியாகினர். இப்படித் தான் புலிகள் மீண்டும் ஆள் திரட்ட முடிந்தது. தற்போது கட்டாய இராணுவ சேவை மறைமுகமாக அமுலுக்கு வந்துள்ளது.



அன்றும் சரி இன்றும் சரி தேசிய முதலாளிகள் மற்றும் சிறு உற்பத்தியாளர்களின் சொத்துகளை பலாத்காரமாக அபகரித்தும், மிரட்டியும் கறக்கின்ற நிலையில், அவர்களும் கூட நாட்டைவிட்டே வெளியேறினர், வெளியேறுகின்றனர். இப்படி பற்பல காரணங்களை அடிப்படையாகக் கொண்டே புலம் பெயர்ந்தனர், புலம் பெயர்கின்றனர். 1983 க்கு பிந்திய இரண்டு வருட காலமே இயக்கத்தில் இணைவோர் எண்ணிக்கை மிக உச்சத்தில் இருந்த காலம். இந்த நிலையை பின்னால் ஒருக்காலும் அடையவில்லை. புதுவை இரத்தினதுரை காட்டும் காரணம் போலியானது. ஆயிரம் ஆயிரமாக 1983 - 1985 க்கும் இடையில் 20 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இயக்கங்களில் இணைந்தனர். ஜனநாயகத்தை துப்பாக்கி முனையில் புதைகுழியில் புதைத்த போது இது தலைகீழானது. புலம் பெயாந்தவனை திட்டி தீர்ப்பதால் உண்மை பொய்யாகாது.



புலம் பெயர்ந்தவனின் உழைப்பைப் பற்றி கொச்சைப்படுத்தும் போது "தூசு தட்டியே காசு பிழைப்பவர்கள்" என்ற உழைப்பின் மீதான வெறுப்பைப் பாடத் தயங்கவில்லை. ஆனால் அவர்கள் வேர்வை சிந்தி சொந்த உழைப்பில் வாழ்ந்தார்கள். ஆனால் உழைப்பில் ஈடுபடாதவர்கள் தூசு தட்டிய காசை இன்று பல்வேறு வழிகளில் வறுகுபவர்களாக மாறியுள்ளனர். அன்று கிண்டல் அடித்த அதே புலிகள் தான், இன்று அதில் தங்கி நிற்கின்றனர். ஆனால் அந்த மக்களுக்காக, அந்த மக்களின் வாழ்வுக்காக அவர்களின் நியாயமான போராட்டம் எதையும் புலிகள் முன்னெடுப்பதில்லை. அதற்கு எதிராக இருந்தபடி மூலதனத்துக்கு சேவை செய்வதில், தம்மைத் தாம் தலைசிறந்தவராக காட்டிக் கொள்கின்றனர். புதுவை இரத்தினதுரை காலத்துக்கும் இடத்துக்கும் ஏற்பப் பாடிப் பிழைப்பவர் தான். மக்களின் அடிப்படையான பிரச்சனைகளில் இருந்து பாடியவர் அல்ல.



தமது சொந்த நடத்தையை நியாயப்படுத்த மக்களுக்கு எதிராக பற்பல கதைகள் பல சொன்ன போதும், ஒன்றை மட்டும் தற்போதைக்கு எடுத்துக் கொள்வோம். இவர் வழங்கிய மற்றொரு பேட்டியில் "இனங்களுக்கிடையிலான சமத்துவம் எமது கனவுகளில் ஒன்றுதான். கணிசமான அளவு அது நனவாகி வருகின்றது. இனத்தின் அடையாளத்தின் மீதான அழிப்புக்கு எதிராக ஆரம்பித்த தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் இப்போது இனங்களுக்கிடையிலான ஐக்கியம் பற்றிச் சிங்கள சமூகத்தை சிந்திக்க வைத்திருக்கிறது. இனத்தின் விடுதலைக்கான போராட்டத்தினுள்ளே சாதி அமைப்பு அப்படியே உறைந்து போய் இருப்பதாக கள நிலை அறியாமல் பரப்புரை செய்யும் சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள். (உறைந்து போகும் அடக்கு முறையை மீறியும் படுகொலையில் இருந்து தப்பியும் என்பதை சொல்லாமல் சொல்லி விடுகின்றார்.) நான் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன். இந்த வெப்பிராயம் வேக்காடுகள் எல்லாம் எனக்கு புரியாதவையல்ல. சாதி ஒழிப்புக்கு எதிராக கவிதைகளையே ஆயுதங்களாக்கி ஊர் ஊராகச் சென்று கவியரங்குகள் நடத்தி இருக்கிறேன். தீண்டாமை ஒழிப்பு வெகுஜனப் போராட்டாம் நடத்தி ஒழிக்கவேண்டிய நிலையில் இருந்த அதே சாதி அமைப்பு இப்போது இருக்கின்றது என்பதை நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன். அதே சமயம் வேருடன் கிள்ளியெறியப்பட்டு விட்டது என்று சொல்வதற்கும் நான் தயாரக இல்லை" புலம்பி புலம்பி உள்ளடகத்தை மழுங்கடிக்க முனைகின்றார்.



பல்வேறு அடிப்படையான கருத்துகள் மீது உண்மையை குழி தோண்டி புதைக்கின்றார். இனங்களுக்கிடையே ஐக்கியம் பற்றி சிந்திப்பதாக கூறும் இவர், இந்த ஐக்கியத்துக்கு புலிகள் குண்டு வைக்கவில்லையா? ஏன், நீர் சிங்களவன் என்று ஒருமையில் அழைத்து கவிதை பல பாடி, ஐக்கியத்தை வேட்டு வைக்கவில்லையா? அப்பாவி சிங்கள மக்களையும், இனவாதிகளையும் பிரித்தறியும் அரசியலை புலிகள் எப்போது எங்கே எந்த விடையத்தில் கையாண்டார்கள். இதை உங்கள் கவிதையில் எங்கே எப்படி சொல்லியிருக்கின்றீர்கள். அப்பாவி சிங்கள மக்களுக்கு எதிராகவும், தமிழ் மக்களின் நியாயமான அரசியல் கோரிக்கைளை ஏற்ற சிங்கள மக்களையும் கூட இனம் காண மறுத்த தமிழ் குறுந்தேசியவாதிகள் அல்லவா நீங்கள். எல்லைகளை கடந்து நரைவேட்டையாடியும் குண்டும் வைத்த போதே ஐக்கியம் தூளாகியது. அதை கூட்டி அள்ளி இன்றைக்கு சிங்களவனே என ஒருமையில் அழைத்தபடி, ஒட்டவைப்பதாக கூறுவது நகைப்புக்குரியது. இங்கு ஐக்கியத்தை புலிகள் நாடவில்லை. மாறாக ஏகாதிபத்தியங்கள் தமது தேவைக்கு இசைவாக நடத்துவிக்கும் பேச்சுவார்த்தை மேடையை அலங்கரிக்கும் சொற்தொடர்கள் தான், சிங்கள் மக்களுடன் ஐக்கியம் பற்றி கூறும் வார்த்தை ஜாலங்கள். உண்மையான ஐக்கியத்தை தமிழ் தேசியப் போராட்டம் கையாண்டு இருந்திருந்தால், ஒடிப் போன 60000 சிங்களப் படை வீரர்கள் புலிகளுடன் எப்போதே இணைந்து இந்த இனவாத அரசையே தூக்கி எறிந்து இருப்பார்கள்.



"சாதி அமைப்பு அப்படியே உறைந்து போய் இருப்பதாக கள நிலை அறியாமல் பரப்புரை செய்யும் சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள். நான் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன். இந்த வெப்பிராயம் வேக்காடுகள் எல்லாம் எனக்கு புரியாதவையல்ல. சாதி ஒழிப்புக்கு எதிராக கவிதைகளையே ஆயுதங்களாக்கி ஊர் ஊராகச் சென்று கவியரங்குகள் நடத்தி இருக்கிறேன் தீண்டாமை ஒழிப்பு வெகுஜனப் போராட்டாம் நடத்தி ஒழிக்கவேண்டிய நிலையில் இருந்த அதே சாதி அமைப்பு இப்போது இருக்கின்றது என்பதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். அதே சமயம் வேருடன் கிள்ளியெறியப்பட்டு விட்டது என்று சொல்வதற்கும் நான் தயாரக இல்லை"

என்ன வக்கிரமான கூற்று. சாதியம் உறைந்தே காணப்படுகின்றது என்பதை மறுக்கும் இவர், அதற்காக போராடத் தேவையில்லை என்கின்றார். அதே நேரம் வேருடன் கிள்ளியெறியப்பட்டு விட்டது என்று சொல்வதற்கும் நான் தயாரக இல்லை என்று கூறுகின்ற போது பிழைப்புவாதத்தின் முரண்பாடு தொங்கி நிற்பதையும், சாதியை பாதுகாக்கும் புலிகளின் அரசியல் நிலைக்கு வக்காலத்து வாங்குவது தொங்கி நிற்பதையும் மறைக்க முடியவில்லை. சாதி அமைப்புக்கு எதிராக போராட வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி, புலிகளின் மேல் சாதிய யாழ் ஆதிக்க நிலைக்காக வக்காலத்து வாங்குகின்றார். ஆனால் வேருடன் கிள்ளியெறியப்பட்டு விட்டது என்று சொல்வதற்கும் நான் தயாரக இல்லை என்று குசு விடும் போது, தன்னையும் மீறி மணத்து விடுகின்றது. ஆனால் இந்த பேட்டியை துணிச்சலாக முரண்பாட்டுடன் வழங்க பின்பலம் உண்டு. இதை புரிந்து கொள்ள சரிநிகருக்கு 1990 களில் வந்த ஒரு வாசகர் கடிதத்தில் நடைமுறை சார்ந்த எதார்த்த உண்மை இதை சுட்டிக் காட்டுகின்றது. "தயவு செய்து புலிகள் பற்றித் தப்பாக எழுதுவதை இன்றுடன் நிறுத்தும்படி மிக மன்னிப்பாக கேட்கிறேன். நீர் எங்கிருந்தாலும் உமது காதுச்சவ்வு விரைவில் துப்பாக்கிக்குண்டு பட்டு வெடித்து நீர் அமெரிக்காவை விட்டு உமது பிள்ளைகளையும் பிரிந்து மேலே போகும் நிலைக்கு ஆளாகிவிடாதீர்கள்" சரிநிகர் பத்திரிகைக்கு இந்துமதி எழுதிய வாசகர் கடிதத்தின் உள்ளடக்கமே, இன்றும் விமர்சனம் மீதான எதார்த்தமாகும். இந்தப் பலத்தில் இருந்தே அனைத்தையும் தலைகீழாக புரட்டி கருத்துரைக்கின்றனர். நாங்கள் விமர்சிக்கும் போதும் எமது காதுச் சவ்வுகளை நோக்கிய துப்பாக்கிகளின் சன்னங்களின் ஊடுருவல் முதல் இரைப்பையை நோக்கி நஞ்சூட்டல் வரையிலான எல்லாவிதமான எதார்த்தமான நிலைமைகளையும் கடந்து கருத்துரைக்கவில்லை. எமது மரணத்தை முகத்துக்கு முன்னால் எதார்த்தத்தில் நாள் தோறும் எதிர்கொண்டே, தமிழ் தேசியம் படைத்த ஜனநாயகத்தில் வாழ்கின்றோம். கருத்துரைக்க வேண்டிய உன்னதமான உணர்வுகளை மற்றவனுக்கு மறுத்தபடி தான், புதுவை இரத்தினதுரை சாதியைப் பற்றி பிதற்றுகின்றார். புலிகள் உயர்சாதிய யாழ் இயக்கம் தான் என்பதும், வலதுசாரி அரசியலால் தன்னை உலகமயமாக்குகின்ற ஒரு அமைப்புதான் என்பதற்கு யாரும் மறுப்புக் கூற முடியாது. இந்த இயக்கம் சாதியத்தை ஒரு நாளும் ஒழிக்காது. சாதியத்தை பாதுகாத்து, அதன் அடித்தளத்தில் உருவான படிமுறையான அடுக்குகளின் உதவியுடன் தான் மக்களைச் சுரண்டி ஏகாதிபத்தியத்துக்கு சேவை செய்யும் இயக்கம் தான். புதுவை இரத்தினதுரை தனது இயக்க அரசியல் சார்ந்த சாதிய ஒடுக்குமுறையை நியாயப்படுத்த, சொந்த தனது ஒடுக்கப்பட்ட சாதியின் பெயரால் கூறி நியாயப்படுத்தவும் பின்நிற்கவில்லை. "ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் (சாதி) சோந்தவர்" என்பதால் தலித்துகள் விரும்பின் குண்டியைக் கழுவி விடலாம். ஆனால் சாதியத்துக்கு எதிரான போராட்டம் என்பது, இந்து மதமும் அதனுடன் ஒட்டிப் பிறந்த சாதியமும் உள்ள வரை (மூளை ஒன்றாகவும் உடல் இரண்டாகவும், அதாவது மதமும் சாதியுமாக உள்ளது) தொடர்வதை, எந்தத் தலித்தும் எந்த இயக்கமும் தடுத்து விடமுடியாது.



சாதியம் உள்ளிட்ட ஜனநாயக போராட்டங்களை நடத்த முற்பட்ட, நடத்திய சில நூறு பேர் புலிகளால் கொல்லப்பட்ட போது புதுவை இரத்தினதுரை அதற்கு வெண்சாமரை வீசி அரசனையும் சபையையும் வாழ்த்தி வாழ்த்துப்பா பாடிக் கொண்டிருந்த பெட்டைக் கோழியாவார். இதற்கு பரிசாக அவரை உயர்சாதி நிலைக்கு, கவிதையின் அந்தஸ்து சார்ந்து உயர்த்தப்பட்டார். இதனால் சாதியம் ஒழிந்து விட்டதாகவும், அதற்கு எதிராக போராட வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறும் இவர், சாதிய வேர் இருந்த போதும் பயப்பட வேண்டிய தேவையில்லை என்ற கூவ முயலுகின்றார். இதை அவர் "நான் இன்றும் மார்க்ஸீயவாதியே" என்று கூறி அதன் மூலம் கொக்கரிக்க முயலுகின்றார்.

King... said...

நான் பேச நினைத்த விடயம் நிர்ஷன் அடிக்கடி பேசிக்டகொள்வதும் கூட இலங்கை ஒருநாளும் உருப்படப்போறதில்லை என்பது அந்த கலந்தாடலுக்கான என்னுடைய தலைப்பாக இருந்தது இந்தப்பதிவை அதற்கான சந்தர்ப்பமாக நினைக்கிறேன் நியைப்பேசலாம் அடுத்த பதிவை தள்ளளிப்போடுங்கள....

King... said...

எனக்கெண்டால் இவ்வளவு சாதி இருந்தது தெரியாது ஆனா பகீ சொன்ன கருத்துக்கு நானும் உடன்படுகிறேன்...யுத்தம் அதன் தீவிரத்தை குறைத்திருக்கிறது...

Anonymous said...

உந்தக் கழிசரை இஞ்சைய்யும் வந்துட்டுதே.

சாதியைப்பற்றிய வினா தொடுக்கப்பட்டால், உது இஞ்ச வந்து தனது புலியெதிர்ப்பு பதிவை சுய விளம்பரப்படுத்தி விட்டுப் போகுது.

உதுக்கு சுய விளம்பரத்தில் உப்புடியொரு திருப்தி!

//மார்க்ஸீயவாதியே" என்று கூறி அதன் மூலம் கொக்கரிக்க முயலுகின்றார்.//

யார் கொக்கரித்துக் கொண்டிருக்க்கினம் எண்டு தெரியயில்லையோ!

தான் மட்டும் தான் மார்க்ஸீயத்தின் தந்தை என்ற நினைப்பாக்கும். பாவமாக் கிடக்கு மனநோய் முத்திவிட்டது எண்டுத்தான் நினைக்கிறன்.

அவசரத்தில வெட்டி ஒட்டைக்க எதய்யெத Copy - paste பன்னிரதென்றும் விளங்காமல் எல்லத்தையும் இழுத்து இஞ்ச போட்டுட்டுது பாருங்கோவன்.

உதுகளிண்ட மார்க்ஸீய கொள்கைகளும் உப்புடித்தான் என்பதை தெளிவுப்படுத்தி போட்டுது.

இறக்குவானை நிர்ஷன் said...

//Anonymous said...
நிர்ஷன், அப்போ மட்டுமில்ல இப்பவும் இருக்குது. அந்தக்காலத்தில தன் சாதி உயர்ந்தது என்று தம்பட்டம் அடிக்கும்போக்கு இருக்குதே. ஐயோ அது கொடுமையிலும் கொடுமை. ஏன் இப்போ கூட அடுத்தவர் வீட்டில சாப்பிடாத கூட்டம் இருக்குது. கல்யாண வீட்டுக்கு போனா கூட ஹால் ல னாலும் சாப்பிட மாட்டாங்க.

யுத்தத்தால் தான் இப்போ குறைஞ்சிச்சென்டு நான் சொல்ல மாட்டன்.
//

கருத்துக்கு நன்றி அனானி. தயவு செய்து பெயரைக் குறிப்பிட்டுச் சொல்லுங்கள்.அப்போது பின்னூட்டத்தின் வலிமை அதிகரிக்கும்.

இறக்குவானை நிர்ஷன் said...

//சண்சுதா said...
வணக்கம் நிர்ஷன், அநேகரைப்போலவே உங்களுக்கும் இந்த மயக்கம் உள்ளது. சாதியத்துக்கு எதிரான போராட்டம் இனப்பிரச்சனை தொடங்குவதற்கு நீண்டகாலத்துக்கு முன்னரே தொடங்கி வெற்றிபெற்றும்விட்டது. எனினும் அவ்வரலாறு மறக்கப்பட்டு சாதியம் ஒழிந்ததுக்கு காரணம் இன விடுதலை போராட்டமே இப்போது பேசப்படுகிறது. சாதியம் மீள்கட்டியமைக்கப்படுவதை தடுத்ததில் இன விடுதலை போராட்டத்துக்கு பெரும் பங்கிருப்பதை மறுக்கமுடியாது.
சாதியமும் அதற்கெதிரான போராட்டமும் என்ற நூல் அண்மையில் வெளியிடப்பட்டது. (புதியபூமி வெளியீட்டகம்) வெகுஜனன், இராவணா என்கிற இருவர் (இப்போராட்டத்தில் பங்குகொண்ட தோழர்கள்) இந்நூலை எழுதியிருந்தனர். இப்போது வெளியிடப்பட்டது இரண்டாவது பதிப்பாகும். முடியுமானால் இந்நூலை படித்துப்பார்க்கவும்.
//
அன்பு வருகைக்கு நன்றி சண்சுதா.
சாதிப்பிரச்சினை விடயத்தில் போதியளவு தெளிவுபெற்றுள்ளேன். மயக்கம் எதுவுமில்லை. நண்பர் பகீ,கிங் ஆகியோரின் பின்னூட்டங்களிலிருந்து சாதி வெறி அடங்கவில்லை என்பது புலப்படுகிறது.

இறக்குவானை நிர்ஷன் said...

//Bava said...
நிர்ஷன். எனது கணவர் யாழ்ப்பாணத்தை சொந்த இடமாகக் கொண்டவர். சிறுவயதிலேயே அங்கிருந்து வந்துவிட்டாலும் சுவடுகளை மறக்காதவர். நீங்கள் குறிப்பிட்ட அனைத்து சாதியினரும் இருந்திருக்கிறார்கள். யாழ் சந்தையில் மீன் வாங்கினால் அவருடைய கை மற்ற சாதிக்காரின் உடம்பில் பட்டுவிட்டதே என்று மீனவரை அடித்து உதைத்த கதையெல்லாம் சொல்லியிருக்கிறார். இப்போது வெளிநாட்டில் அவர் இருக்கிறார். அங்கும் இவ்வாறு சாதி்ப்பிரச்சினைகள் உள்ளதாக கூறியிருக்கிறார். இவ்வளவுதான் எனக்குத் தெரியும்
//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பவா.

இறக்குவானை நிர்ஷன் said...

//யாருக்கும் பயப்படாதவன் said...
வலைப்பக்கங்களை கடந்தசில வருடங்களாக பார்த்து வந்தாலும் எனது முதல் பின்னூட்டம் இதுதான்.
//

பெயரைப் பார்த்ததும் அதிர்ந்துபோனேன். உங்களை என்னவென்று அழைப்பது? எங்கிருந்து பதிவிடுகிறீர்கள்?
சரி. என்னவாயிருந்தாலும் என்னுடைய வலைத்தளத்தில் முதல் பின்னூட்டம் இட்டமைக்கு நன்றிகள். வலுவான உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கன.

பெயருக்கேற்றாற்போல பயப்படாமல் தொடருங்கள்.வாழ்த்துக்கள்.

இறக்குவானை நிர்ஷன் said...

வருகைக்கும் ஆழமான பின்னூட்டத்துக்கும் நன்றி தமிழரங்கம்.

இறக்குவானை நிர்ஷன் said...

// King... said...
எனக்கெண்டால் இவ்வளவு சாதி இருந்தது தெரியாது ஆனா பகீ சொன்ன கருத்துக்கு நானும் உடன்படுகிறேன்...யுத்தம் அதன் தீவிரத்தை குறைத்திருக்கிறது...
//
வாருங்கள் கிங். இந்தப் பதிவைப் பார்த்துவிட்டு சாம்பல் பூத்த நெருப்பாய் ஒவ்வொருவர் மனதிலும் சாதிவெறி இருப்பதாக பல நண்பர்கள் கூறினார்கள். எம்மவர்கள் எப்போது திருந்துவார்களோ?
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.

இறக்குவானை நிர்ஷன் said...

//பகீ said...
நிர்ஷன்,

நீங்கள் குறிப்பிட்டவற்றை விட அதிகமான சாதிகள் மற்றும் கிழைச்சாதிகள் யாழ்ப்பாணத்தில் இருந்திருக்கின்றன. அவைபற்றி பிறிதொருமுறை சந்தர்ப்பம் கிடைத்தால் சொல்கிறேன்.

சாதீயம் தொடர்பான பிரச்சனை நீண்ட காலத்துக்கு முன்னரே தொடங்கி சாதீயம் இல்லாது போய்விட்டது என்கிற சண்சுதாவின் கருத்து அவரின் தெளிவின்மையை காட்டுகிறது. சாதீயத்திற்கு எதிரான போராட்டம் ஆரம்பமானதையெ அவர் குறிப்பிடுகிறார் தவிர அது வெற்றி பெறவில்லை.

இனப்பிரச்சனை சாதீயத்தை இல்லாதொழித்து விட்டது என்பதும் சரியான கருத்தல்ல.

சரியாக கூறவேண்டுமென்றால், இனப்பிரச்சனை சாதீயப்பிரச்சனையை மறைத்து வைத்திருக்கிறது. அவ்வளவுதான். நீண்டகாலமாக மறைக்கப்பட்டிருப்பதால் அதன் தீவிரம் குறைக்கப்பட்டிருப்பதும் உண்மை.

இன்னமும் கோயிலுக்குள் போக அனுமதி மறுக்கப்பட்டவர்களும், பாடசாலையில் கடைசி வரிசையில் அமர்த்தப்படுபவர்களுமாக சாதீயம் யாழப்பாணத்தில் இருக்கின்றது என்பது உண்மை.

இந்த உதாரணங்கள் மிகக்குறைவெனினும் சாதி பாக்காத கலியாணம் ஒண்டு நடந்தாலே பெரிய விசயம்.

கனக்க சொல்ல ஆசை ... பிறகொருக்கா ஏலுமெண்டா வந்து சொல்லுறன்....
//
பகீ,
இந்தப் பதிவை எழுதுவதற்கு வேறொரு காரணமும் உண்டு. எனது நண்பர் ஒருவரின் நிச்சயிக்கப்பட்ட திருமணமே இந்த சாதியெனும் விஷத்தை பொழியும் வெறியர்களால் தடுத்து நிறுத்தப்பட்டது. சொல்வதற்கே வெட்கமாகவும் கவலையாகவும் உள்ளது.
ஏன் சொல்லவந்ததை சுருக்கமாக கூறியிருக்கிறீர்கள். உங்களது மேலதிக தகவலுக்காக நான் காத்திருக்கிறேன் பகீ.
நன்றிகள்.

யாருக்கும் பயப்படாதவன் said...

நிர்ஷன். உங்களது வாழ்த்துக்களுக்கு நன்றி.:)
சாதி பற்றி பேசும்போது ஈழத் தமிழ் சகோதரங்கள் அமைதி காக்கிறார்கள் பார்த்தீர்களா? ஏனென்றால் எல்லார் மனதிலும் இது இருக்கிறது என்பது உண்மை. விடுதலை பற்றிப் பேசுபவர்கள் சாதி விடுதலையைப் பற்றியும் பேசட்டும்.

M.Rishan Shareef said...

இவ்வளவு பிரிவுகளா?
இன்றுதான் கேள்விப்படுகிறேன்.ஆச்சரியமாக இருக்கிறது. :(

Anonymous said...

//வருகைக்கும் ஆழமான பின்னூட்டத்துக்கும் நன்றி தமிழரங்கம்.//

ஆழமான பின்னூட்டமோ????

option=com_content&view=article&id=467:2008-04-17-06-36-48&catid=71:0103&Itemid=76

//கருத்து மக்களைப் பற்றிக் கொண்டால் அது மாபெரும் சக்தியாக உருவெடுக்கும்//

உது என்ன சக்தியடப்பா?? இந்த பதிவுக்கும் இதுக்கு என்ன சம்பந்தம்??

மனநோய பற்றிக் கொண்டாலும் உப்புடித்தான் உருவெடுக்கும்.

//மாற்றம் என்பதே மாறாதது//

மடமையும் மாறாதது தான். வெட்டி ஒட்டியதைப் பார்க்க தெரியுது.

முன்பக்கம் பி.இரயாகரன் 2001-2003

முன்னைய தளம்
Banner
உலாவுவோர்
 120 guests

உலாவியோர்
: 55593

புலிகளும் சாதீயமும் PDF Print E-mail

பி.இரயாகரன் - 2001-2003
Written by பி.இரயாகரன்
Tuesday, 01 July 2003 07:30

உதுவெல்லாம் என்ன இழவடாப்பா?? உதுக்குப் பெயரோ ஆழமான பின்னூட்டம்.

தனது பதிவில் மட்டுருத்தல், அனாமிகளுக்கு அனுமதிப்பதில்லை என்றெல்லாம் வைத்துக்கொண்டு, அடுத்தவனின் பதிவில் பின்னூட்டம் எனும் பெயரில் தனது மனகழிசல்களை எல்லாம் உப்புடி குப்பையாக கொட்டுவதுதான் மாக்கிசீய தந்தையின் ஆழமான பி.. த்தூ! புன்னூட்டமோ??

Anonymous said...

//உலாவுவோர்
 120 guests


உலாவியோர்
: 55593//

ஓம் தளத்தில் உலாவுவோர், உலாவியோர் என்னிக்கையை எல்லாம் அடுத்தவர் பதிவில் இட்டு ஒருவர் மகிழ்வதாக இருந்தால் அது நிச்சயம் மனநோயாகத்தான் இருக்கும்.

இது என்ன சாதி மனநோய் என்றுதான் விளங்கயில்லை.

எண்டயப்பா...!

நான் எண்ட வாழ்க்கையில் இப்படி ஒரு பி(பு)ன்னூட்டத்தைக் காணயில்லை.

HK Arun said...

இப்பொழுது தான் இப்பதிவைப் பார்த்தேன்.

இதற்கான பின்னூட்டம் நீண்டுச்செல்வதால் பதிவாகவே இட்டுள்ளேன்.

நன்றி!

தமிழரங்கம் said...

எனது பதிவில் தேவையற்ற தகவல்கள், அதில் உள்ளாமைக்கு மனம் வருந்துகின்றோம்;. இதனால் உங்களுக்கு எற்பட்ட சிரமத்துக்கு மனவருந்தகின்றோம். மன்னிக்கவும்.

ஆனால் இதை இனம்தெரிய ஒருவர், இதை வைத்து சாதி பற்றி பேசுவது அவரின் அறிவின் தரத்தைக் காட்டுகின்றது. கட்டுரையை விவாதிக்க முடியாது இருப்பது தான், இப்படி வெளிப்படுகின்றது.

இக்கட்டுரையுடன் தொடர்புடையதும், பாலசிங்கம் கருணா பிளவின் போது கூறியதை இங்கு தருகின்றேன்.

பாலசிங்கம் இதைப்பற்றி கூறும் "இங்கு மரபு ரீதியாக தமிழ்ச் சமுதாயத்தில் நூற்றாண்டுகளாக ஊறிப்போயிருந்த சாதி, சமய, வர்க்க வேறுபாடுகளை விஞ்சி, ஐக்கியப்பட்ட ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தைக் கட்டியெழுப்பியதற்காகத் தமது மக்களால் பெரிதும் விரும்பி ஏற்று போற்றப்படுபவர் பிரபாகரன். பிரபாகரனுடன் இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக சேர்ந்து வாழ்ந்தவன், இணைந்து தொழிற்பட்டவன் என்ற வகையில் அவரின் எண்ணத்திலோ, செயலிலோ பிரதேசவாதத்திற்கான சாயலைக்கூட நான் கண்டதில்லை. புலிகளின் தலைமைத்துவத்தின் மீது கருணா சுமத்தும் பிரதேசவாதக் குற்றச்சாட்டு இல்லாததொன்று, அபாண்டமானது" என்றார். இதில் முரண் என்னவென்றால் பிரதேசவாதம், சாதியம், வர்க்கப் பிளவுகள் சமூகத்தில் உண்டு என்பதை ஏற்றுக் கொள்வதாகும்.

சமூகத்தில் சாதி, சமய, வர்க்க வேறுபாடுகள் உள்ளது என்றால், அந்த சமூகத்தால் பிரபாகரன் போற்றப்படுகின்றார் என்றால், அந்த இயக்கம் சாதி, சமய, வர்க்க வேறுபாடுகளை அடிப்படையாகக் கொண்டதே. இதுதான் எதார்த்த உண்மை. தனிப்பட்ட பிரபாகரன் என்ன நினைக்கின்றார் என்பதல்ல. இதற்கு வெளியிலும் கூட தனிப்பட்ட பிரபாகரன் எப்படிப்பட்டவர் என்பதை மக்கள் அறியார். பாலசிங்கம் கூறுவது போல் "இங்கு மரபு ரீதியாக தமிழ்ச் சமுதாயத்தில் நூற்றாண்டுகளாக ஊறிப்போயிருந்த சாதி, சமய, வர்க்க வேறுபாடுகளை விஞ்சி, ஐக்கியப்பட்ட" போராட்டம் என்பது இவற்றைக் களையாது தமிழ் தேசியம் கட்டமைக்கப்பட்டது என்பதை ஒத்துக் கொள்கின்றது. அதாவது இவற்றை அடிப்படையாகக் கொண்ட தேசிய இயக்கம் என்பது, பிரதேச, சாதிய, ஆணாதிக்க, வர்க்க அடிப்படையைக் கொண்டது. காலம்காலமாக யாழ் மையவாதத்தால் இவை கட்டிப் பாதுகாக்கப்படுகின்றது. இது வெறும் பிரபாகரன் என்ற தனிநபர் சார்ந்த பிரச்சனையல்ல. இது ஒரு சமூகப் பிரச்சனை. இதன் பிரதிநிதியாக புலிகளும் அதன் தலைவர் பிரபாகரனும் உள்ளனர் அவ்வளவே.

பாலசிங்கம் மேலும் ஒருபடி மேலே போய் சாதி, சமய, வர்க்க வேறுபாடுகளை தலைவர் பிரபாகரன் தீர்த்துள்ளார் அல்லது தீர்த்து வைப்பார் என்பது மற்றொரு வேடிக்கையான வாதம். பிரதேசவாதம், சாதியம், வர்க்கம் போன்ற சமூகப் பிரச்சனைகளை, எப்படி புலிகளின் தனிப்பட்ட தலைவர் பிரபாகரன் தீர்ப்பார் அல்லது தீர்த்துள்ளார் என்றால், அதை மட்டும் சொல்லமாட்டார்கள்

http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1775:2008-05-31-22-20-22&catid=72:0406&Itemid=76

Anonymous said...

"இலங்கை யுத்தம் சாதிப்பிரச்சினையை இல்லாமல் செய்ததா?" இது தான் இந்த பதிவின் தலைப்பு.

இதற்கான பதில் ஆம், அல்லது இல்லை. அதற்கு மேல் தெரிந்தால் அதற்கான விளக்கம். இது தான் பொருத்தமானது.

//எனது பதிவில் தேவையற்ற தகவல்கள், அதில் உள்ளாமைக்கு மனம் வருந்துகின்றோம்//

இது தான் அறிவா?

சண்சுதா said...

"இன்று சிலர் வேண்டுமென்றும் சிலர் அறியாமையினாலும் சாதியம் ஒழிந்துவிட்டதென்றும் தமிழ்த்தேசியமே அதை முறியடித்ததென்றும் பேசுகின்றனர். இரண்டுமே பொய்யானவை. சாதியம் இன்னும் ஒழியவில்லை. அதற்கான சான்றுகள் வெளிவெளியாகவே உள்ளன. ஆயினும் சாதிய ஒடுக்குமுறைக்கு சாவுமணி அடித்தாயிற்று. தாழ்த்தப்பட்ட மக்கள் இன்று தலை நிமிர்ந்து நிற்கின்றனர். அந்த வெற்றிக்கு தமிழ்த்தேசியம் எவ்வகையிலும் பங்களிப்பு செய்யவில்லை. அதை இயலுமாக்கியவர்கள் தாழ்த்தப்பட்ட வெகுசனங்களும் அவர்களோடு இணைந்து நின்று போராடிய நேர்மையான இடதுசாரி, சனநாயக முற்போக்கு சக்திகுளுமேயாவர்"-
சி. சிவசேகரம்
முன்னுரை,
இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும்

//ஆயினும் சாதிய ஒடுக்குமுறைக்கு சாவுமணி அடித்தாயிற்று.//
இதையே நான் "வெற்றிபெற்றும் விட்டது" என்று குறிப்பிட்டேன். மொழித்தற் தவறால் ஏற்பட்ட பிரச்சனைக்கு வருந்துகிறேன்.

இறக்குவானை நிர்ஷன் said...

//யாருக்கும் பயப்படாதவன் said...
நிர்ஷன். உங்களது வாழ்த்துக்களுக்கு நன்றி.:)
சாதி பற்றி பேசும்போது ஈழத் தமிழ் சகோதரங்கள் அமைதி காக்கிறார்கள் பார்த்தீர்களா? ஏனென்றால் எல்லார் மனதிலும் இது இருக்கிறது என்பது உண்மை. விடுதலை பற்றிப் பேசுபவர்கள் சாதி விடுதலையைப் பற்றியும் பேசட்டும்.
//
வருகைக்கு நன்றிகள்.

இறக்குவானை நிர்ஷன் said...

//எம்.ரிஷான் ஷெரீப் said...
இவ்வளவு பிரிவுகளா?
இன்றுதான் கேள்விப்படுகிறேன்.ஆச்சரியமாக இருக்கிறது. :(
//

இதில் என்ன ஆச்சரியம் நண்பரே. இன்னும் இருக்கிறது. தேடிய பின்னர் பதிவிடுகிறேன். வருகைக்கு நன்றி.

இறக்குவானை நிர்ஷன் said...

//HK Arun said...
இப்பொழுது தான் இப்பதிவைப் பார்த்தேன்.

இதற்கான பின்னூட்டம் நீண்டுச்செல்வதால் பதிவாகவே இட்டுள்ளேன்.

நன்றி!
//
வருகைக்கு நன்றி அருண்.உங்களுடைய வலைத்தளம் பார்த்தேன். நல்லதொரு ஆக்கம். தேவையானவர்களுக்கு தேவையான பதிவு. பின்னூட்டம் இட்டிருக்கிறேன்.
நம்ம பகீயும் நல்லதொரு பதிவைத் தந்திருக்கிறார்.

இறக்குவானை நிர்ஷன் said...

வருகைக்கு நன்றி தமிழரங்கம். சம்பந்தப்பட்டவர்கள் உங்கள் கேள்விகளுக்கு பதில்தருவார்கள் என நினைக்கிறேன்.

இறக்குவானை நிர்ஷன் said...

//சண்சுதா said...
"இன்று சிலர் வேண்டுமென்றும் சிலர் அறியாமையினாலும் சாதியம் ஒழிந்துவிட்டதென்றும் தமிழ்த்தேசியமே அதை முறியடித்ததென்றும் பேசுகின்றனர். இரண்டுமே பொய்யானவை. சாதியம் இன்னும் ஒழியவில்லை. அதற்கான சான்றுகள் வெளிவெளியாகவே உள்ளன. ஆயினும் சாதிய ஒடுக்குமுறைக்கு சாவுமணி அடித்தாயிற்று. தாழ்த்தப்பட்ட மக்கள் இன்று தலை நிமிர்ந்து நிற்கின்றனர். அந்த வெற்றிக்கு தமிழ்த்தேசியம் எவ்வகையிலும் பங்களிப்பு செய்யவில்லை. அதை இயலுமாக்கியவர்கள் தாழ்த்தப்பட்ட வெகுசனங்களும் அவர்களோடு இணைந்து நின்று போராடிய நேர்மையான இடதுசாரி, சனநாயக முற்போக்கு சக்திகுளுமேயாவர்"-
சி. சிவசேகரம்
முன்னுரை,
இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும்

//ஆயினும் சாதிய ஒடுக்குமுறைக்கு சாவுமணி அடித்தாயிற்று.//
இதையே நான் "வெற்றிபெற்றும் விட்டது" என்று குறிப்பிட்டேன். மொழித்தற் தவறால் ஏற்பட்ட பிரச்சனைக்கு வருந்துகிறேன்.
//

மீண்டும் வருகை தந்திருக்கிறீர்கள். நன்றி. இதைப்பற்றியான விரிவான பதிவுகள் இரண்டினை நண்பர் பகீயும் நண்பர் கொங்கொங் ஈழவனும் தந்திருக்கிறார்கள்.
சாதியப்பிரச்சினை குறைந்ததற்கு நம்ம இளைஞர்களும் காரணம் தானே சண்சுதா?

வருகைக்கு நன்றி.

Anonymous said...

//இதில் முரண் என்னவென்றால் பிரதேசவாதம், சாதியம், வர்க்கப் பிளவுகள் சமூகத்தில் உண்டு என்பதை ஏற்றுக் கொள்வதாகும்.//

இவ்வாரான வர்க்கப் பிளவுகள் இலங்கையில் இல்லை என்று யார் கூறியது.

தவிர இது எல்லையைக் கடந்து, உலகளவில் எங்கும் உலாவும் பிரச்சினை; முஸ்லீம்களில் சுன்னி ஷியா போன்ற அமைப்புகள் உள்ளன. கிசுஸ்தவத்திலும் எத்தனைப் பிளவுகள்.

இவை சமூகம் சார்ந்தப் பிரச்சினை. பிளகுவுகள் இல்லாத ஒரு நாட்டையோ, இடத்தையோ உங்களால் குறிப்பிட்டுக் காட்ட முடியுமா? பிளவுகள் இல்லாத ஒரே பாடசாலையிலும் பல பிரிவுகளாக பிரித்து இல்ல விளையாட்டுப் போட்டியும் பாடசாலைகளில் நடாத்தப் படுகிறதே!

//இதற்கு வெளியிலும் கூட தனிப்பட்ட பிரபாகரன் எப்படிப்பட்டவர் என்பதை மக்கள் அறியார்.//

199+ களில் இலங்கையை விட்டு வெளியேறிய நீங்கள் இன்றைய இலங்கை நிலவரத்தை ஊடகங்களூடாக அறிந்து அதை தனக்கேற்ப கருத்துருவாக்கத்துடன் கண் மூக்கு வைத்து புலியெதிர்ப்பை அரசியல் பாத்திரத்தை எடுத்து வருகின்றீர்கள். தவிர பிரபாகரனை தனிப்பட்ட ரீதியில் எப்படியய்யா அறிந்துக் கொண்டீர்கள்?

//எப்படி புலிகளின் தனிப்பட்ட தலைவர் பிரபாகரன் தீர்ப்பார் அல்லது தீர்த்துள்ளார் என்றால், அதை மட்டும் சொல்லமாட்டார்கள்//

எந்த ஒரு சமூகம் சார்ந்தப் பிரச்சினைகளையும் எந்த ஒரு அமைப்போ, ஆட்சியோ தீர்த்து விட முடியாது. ஆனால் எம்மவர்களின் மனதில் புதைந்து போயிருக்கும் பிற்போக்குக் குணங்களை சில விழிப்புணர்வூட்டல் ஊடாக மாற்றியமைக்க முடியும். அரசு எனும் அதிகாரத்தூடாக சில சட்டங்களை கடுமையாக்கி இதனை மட்டுப் படுத்த முடியும்.

இன்னும் அரசு எனும் நிலையை அடையாத நிலையிலும் தமது பிரதேசத்தில் பல முற்போக்கு சிந்தனைகளை புலிகள் வளர்த்தே உள்ளனர் என்பது பலருக்குத் தெரியும்.

சிற்சிறு கிராமங்களிலும் "மாவீரர் படிப்பகம்" என்று சில புத்தகங்களையும், செய்தித்தாள்களையேனும் போட்டேச் செல்கின்றனர்.

சாதி போன்ற நம் சமுதாயத்தில் வேறூண்டி நிற்கும் பிளவுகளை சட்டங்களூடாக மட்டுப் படுத்தியே வருகின்றனர்.

199+ களில் நாட்டை விட்டு வெளியேறிய நீங்கள் ஊடகங்களில் வாயிலாக சில விடயங்களை அறிந்து தமது புலியெதிர்ப்புக் கொள்கை சித்தரிப்புகளுக்கே பயன்படுத்தி வருகின்றீர்களே தவிர, நடுநிலையான நேர்மையான எந்த ஒரு கருத்தும் உங்கள் எந்த ஒரு பதிவிலும் துளியேனும் காண்பதற்கில்லை.

ஐயா நீங்கள் வர்க்கம், அரசியல், சாதியம், பெண்ணியம், தேசியம், நிறம், மதம், பண்பாடு, கலாச்சாரம், இசை, சுற்றுச்சூழல் என அனைத்து விடையங்களையும் அழகாக எழுதிவருகின்றீர்கள். இது ஒரு ஈழத்தமிழனின் திறமைகளுக்கு இதுவும் சான்று, உங்கள் எழுத்தாற்றலும் பாராட்டுக்குறியதே!

இத்தனை எழுத்தாற்றல் உள்ள நீங்கள் எமது சமுதாயம் தற்போது எதிர்கொண்டிருக்கும் எமது இனத்தின் எதிரியான சிங்கள அரசை விமர்சிப்பதைவிட புலிகளை விமர்சிப்பதையே முதன்மை படுத்தி வருவதன் நோக்கம் என்ன?

புலிகளை ஆயூததாரிகள் என்கிறீர்கள். அகிம்சை வழிப் போராட்டம் இலங்கை தேசத்தில் எவ்வாறு சாத்தியமானது எனும் மாபெரும் வரலாற்றை நாம் அனைவரும் கல்லாதவர்களா????

அல்லது நீங்கள் ஒருப்போதும் ஆயுதம் தரிக்காதவரா? நீங்களும் ஒரு காலக்கட்டத்தில் ஓர் இயக்கத்தின் உருப்பினரல்லவா? உங்கள் இயக்கம் என்ன மாகாத்மா காந்தியில் வழியில் அகிம்சைப் போராட்டத்தையா கையில் எடுத்தது?

உங்களது புலியெதிர்ப்பு கொள்கையால் என்ன நன்மை விளைகிறது என்பதை அறிவீர்களா?

புலி எனும் பெயரில் அப்பாவி மக்களை அழித்தொழிக்கும் இலங்கை அரசுக்கும் அதை அண்டிப் பிளைக்கும் ஒட்டுண்ணி குழுக்களின் விசம பிரச்சாரத்திற்கும் அல்லவா துணைப் போகின்றது.

நீங்கள் மாற்று இயக்கங்கள் அளவிற்கு தரம் கெட்ட நிலைப்பாட்டி இல்லை என்பதையும் நாம் அறிவோம்.

தினம் தினம் செத்து மடியும் நம் சமூகத்திற்குள் ஒருவரான உங்களது எழுத்துக்கள் அதே எம் மக்களின் எதிர் சக்திகளுக்கே துணைப் போகின்றன.

உண்மையில் எம்மக்களின் மீது நலன் கொண்டவராயின் ஆக்கப்பூர்வாமான செயலில் காட்டிம்படி கேட்டுக்கொள்கின்றேன்.

நன்றி
தீவான்

சண்சுதா said...

இதற்கு பதிலான என் பதிவை பாருங்கள்...http://tamilgarden.blogspot.com/2008/06/blog-post_26.html
நன்றி

சண்சுதா said...

சரி நிர்ஷன், சாதியத்தை மீளக்ட்டமைப்பதை தடுத்ததில் தேசியத்தின் பங்கிருப்பதாக கூறலாம். நீங்கள் சொல்ல்வதுபோல இன்றய இளஞ்ர்கள் மதியில் சாதி வெறி அற்றுப்போவதற்கு காரணம் என்ன? அவர்களின் உளச்சார்பு மாற்றமே. அதற்ற்கு காரணம் தேசிய எழுச்சிக்கு முற்ற்பட்ட போராட்ட வரலாறாகும்.

இறக்குவானை நிர்ஷன் said...

தீவான்,
வாருங்கள்.
உங்கள் கருத்து வரவேற்கத்தக்கது. சாதி என்ற தனிச்சொல் எந்தளவுக்கு மனித மனங்களை ஆட்டிப்படைத்து இன்பம்காணுகிறது என்பதனை பின்னூட்டம் மூலம் கருத்து சொல்ல மறுக்கும் நண்பர்கள் பலர் மின்மடலினூடாக சொல்லியிருந்தார்கள்.

நீங்கள் சொல்வது போல தமிழ் மக்களை பேரழிவிலிருந்து தடுக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் அனைத்து தமிழரிடத்திலிருந்தும் வரவேண்டியது ஆவசியம். அந்த வழியிலேயே இந்தச் சாதிப்பிரச்சினையால் சமூகம் சீரழிவதை எடுத்துக்காட்ட வேண்டியும் உள்ளது.

வருகைக்கு நன்றிகள். உங்கள் கருத்துக்களுக்கும்.

இறக்குவானை நிர்ஷன் said...

சண்சுதா,
உங்கள் பதிவில் நிறைய தகவல்கள் அறிந்தேன். உங்களுடைய பதிவால் நிறைய தகவல்களை அறிந்தேன். ஆரம்பத்தில் சில விடயங்களை வாசிக்கும்போது சந்தோஷமாக உணர்ந்தாலும் நிறைவுப்பகுதியில் நெஞ்சில் சோகமே குடிகொண்டிருந்தது. இவ்வாறான தகவல்கள் ஒடுக்குமுறைகள் இளம் சமுதாயத்தினரையும் சென்றடையவேண்டும். அதனூடாக புதியதொரு இலக்குப்பாதைக்கு வழிவகுக்கவேண்டும் என்பதே எனது ஆசையாக இருக்கிறது.



இப்போதைய இளைஞர்களிடம் சாதிய வெறி இல்லை என்று நான் சொல்லமாட்டேன். ஆனால் அவர்கள் அதனை பொருட்டாக கொள்வதில்லை. பெரும்பாலான இளைஞர்களின் முற்போக்கு சிந்தனை அவற்றை மாற்றியமைத்துள்ளது.

ஹேமா said...

வணக்கம் நிர்ஷன்.எங்கள் நாட்டு இனப்பிரச்சனையைத் தொட்டு நீங்கள் எழுதியிருக்கிற சில ஆக்கங்களைப் பார்த்தேன்.நன்றி.யாழ்/வடக்கில் சாதிமுறை பற்றி எழுதியிருக்கிறீர்கள்.உங்கள் நம்பிக்கை வீண்போகக் கூடாது.என்னைப் பொறுத்த மட்டில் சாதி என்கிற ஒரு விசயம் யாழில் அல்லது எங்கள் யாழ் மக்களுக்கிடையில் ஒழியவில்லை.ஒளிந்திருக்கிறது என்றுதான் கூறுவேன்.
வெளிநாடுகளில் பிறந்து வளரும் பிள்ளைகளுக்குக் கூடச்
சொல்லிக் கொடுத்து வளர்க்கிறார்கள்.குழந்தைகள்
முழி பிதுங்குகிறார்கள்.கல்யாணம் பேசும்போது சாதி கேட்டே பொருத்தம் பார்க்கிறார்கள்.இதை என்ன செய்வது?இது நான் அறிந்த உண்மை.

இறக்குவானை நிர்ஷன் said...

//ஹேமா said...
வணக்கம் நிர்ஷன்.எங்கள் நாட்டு இனப்பிரச்சனையைத் தொட்டு நீங்கள் எழுதியிருக்கிற சில ஆக்கங்களைப் பார்த்தேன்.நன்றி.யாழ்/வடக்கில் சாதிமுறை பற்றி எழுதியிருக்கிறீர்கள்.உங்கள் நம்பிக்கை வீண்போகக் கூடாது.என்னைப் பொறுத்த மட்டில் சாதி என்கிற ஒரு விசயம் யாழில் அல்லது எங்கள் யாழ் மக்களுக்கிடையில் ஒழியவில்லை.ஒளிந்திருக்கிறது என்றுதான் கூறுவேன்.
வெளிநாடுகளில் பிறந்து வளரும் பிள்ளைகளுக்குக் கூடச்
சொல்லிக் கொடுத்து வளர்க்கிறார்கள்.குழந்தைகள்
முழி பிதுங்குகிறார்கள்.கல்யாணம் பேசும்போது சாதி கேட்டே பொருத்தம் பார்க்கிறார்கள்.இதை என்ன செய்வது?இது நான் அறிந்த உண்மை
//

வாருங்கள் ஹேமா.
பிறக்கும் குழந்தைகள் சுமார் 10 வயதை அடையும்போதே பெற்றோர் இதனைச் சொல்லிக்கொடுக்கின்றனர். இதனால் பாடசாலையில் மட்டுமன்றி வேறு இடங்களில் கூட சகஜமான உறவுகளையும் உரையாடல்களையும் சிறுவர்கள் தவிர்க்கின்றனர். கொழும்பில்கூட இவ்வாறான சிறுவர்களை நான் கண்டுள்ளேன். நான் படிப்பிக்கும் சந்தர்ப்பங்களில் இவ்வாறான வழிநடத்தல்களின் பின்விளைவுகளை குறிப்பிடுவதுண்டு.
எம்மவர்கள் பிரிவினையுடன் இருப்பதால் தான் நாம் எதிர்பார்க்கும் இலட்சிய நோக்கு கூட காட்டிக்கொடுத்தல்களாலும் பிற்போக்குச் சிந்தனையாலும் பின்தள்ளப்படுகிறது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. உங்களது கருத்து நிச்சயமாக சம்பந்தப்பட்டவர்களை காயப்படுத்தி நியாயப்படுத்தும்.

யாருக்கும் பயப்படாதவன் said...

எங்கட தமிழ் சனங்களுக்கு எவ்வளவு சொன்னாலும் செவிடன் காதில்...

மாதிரித்தான்.
என்னுடைய கேள்விக்கு பதில் சொல்லாததை கவனித்தீர்களா நிர்ஷன்.

படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன்கோயில் கதைதான் நம்மவர்களுக்கு.

சிவத்தமிழோன் said...

ஒன்றே குலம் ஒருவனே தேவன் அன்பே சிவம் என்னும் திருமந்திரம் மறையாய் எங்கும் பரவட்டும்

சாதிகள் இல்லையடி பாப்பா என்ற பாரதியின் கனவு பலிக்கும் என்று நம்பிக்கையுடன்........