Wednesday, September 19, 2007

யாருக்காக இந்த நாடகம்?

தொழிலாளர்களின் சம்பளப்பிரச்சினை மீண்டும் தலைதூக்கியுள்ளது. மலையக தொழிற்சங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மலையகத் தலைவர்கள் எனக்கூறிக்கொள்ளும் சிலர் அரசியல் இலாபம் தேட முயற்சிப்பது வெளிச்சமாகியுள்ளது.

அட்டன் பகுதி தோட்டங்களுக்கு சென்ற சில தலைவர்கள் மற்றொரு தொழிற்சங்கத்துக்கு எதிராக போராட்டம் தொடங்குங்கள் நாங்கள் பக்கபலமாக இருக்கிறோம் எனக் கூறியிருக்கிறார்கள்.இது யாருக்காக?மதிப்புக்குரிய தலைவர்களே உங்களுக்குள் இருக்கும் முரண்பாடுகளுக்கு பழிதீர்த்துக்கொள்ள அப்பாவி மலையக மக்களை பகடைக்காய்களாக பயன்படுத்தாதீர்கள்.

மதுவுக்கு அடிமையாக வேண்டாம் என நீங்களே கூறிக்கொண்டு உங்கள் குறிக்கோள்களை அடைந்துகொள்வதற்காக கசிப்பு வாங்கிக்கொடுப்பதற்கு எப்படி மனம்வந்தது?வரலாற்றுக்குற்றம் எப்போதாவது நிரந்தரமான தண்டனையை உங்களுக்கு வழங்கும். அப்பாவி மக்களின் வாழ்க்கையை கெடுத்த அவப்பெருக்கு உட்படாதீர்கள்.

'' சமயத்தையும் சமூகத்தையும் வளர்க்காவிட்டாலும் பரவாயில்லை.
அழிக்காமலாவது இருங்கள்''
-வீரத்துறவி.

1 comment:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

தொழிலாளவர்க்கத்தை முதல் மது அரக்கனிடமிருந்து மீழுங்கள்.