Monday, October 1, 2007

இருள் தரும் வெளிச்சம்...

அண்மையில் இரத்தினபுரி காவத்தை தலுக்கலை தோட்டப்பகுதிக்கு சென்றிருந்தேன்। அங்கு லயன் குடியிருப்பிலுள்ள மக்கள் இரவில் விளக்கு வைத்துக்கொள்வதில்லை। வீட்டு முற்றத்தில் தீ வைத்து சுற்றி உட்கார்ந்திருக்கிறார்கள்। ஏன் எனக் கேட்டபோது மண்ணெண்ணெய் விலை அதிகரித்திருக்கிறது। காசுக்கு எங்கே போவோம்। அதுதான் காட்டு மரங்களை கொண்டு வந்து தீ மூட்டி உட்கார்ந்திருக்கிறோம்। தினமும் இப்படித்தான் என்கிறார்கள் அந்தத் தோட்டத்து மக்கள்।

வீடுகளில் சிறிய வெளிச்சம் கூட இல்லை। பாடசாலைக்கு செல்லும் பிஞ்சுக்குழந்தைகள் அந்த வெளிச்சத்தில் கூடி விளையாடுகின்றன। ஆனால் படிப்பதில்லை। படிப்பதற்கு போதிய வெளிச்சம் இல்லை। இதனை யார் கவனிப்பார்கள்?

வெளிச்சத்தில் விளையாடித்திரியும் இந்தக்குழந்தைகள் தங்கள் கல்வியை பாழாக்கிக்கொள்கிறார்கள் என்பதை அறிவார்களா? வெளிச்சத்துக்காக தீமூட்டும் இவர்களின் வாழ்க்கை இருளுக்குள் தள்ளப்படுகிறது।

என்ன சொல்லியும் பிரயோசனமில்லை। கடந்த சில வருடங்களாகவே எமது தலைவர்கள் மெளனவிரதத்தில் தானே ஈடுபட்டுவருகின்றனர்।

மலையகத்துக்குத் தனியான வானொலி தொலைக்காட்சி சேவை வேண்டும் எனக் கூறியிருக்கிறார்। ஐயா நல்ல விஷயம்தானுங்க। அதுக்கு முன்னால தொழிலாளர்களின் வயிற்றுப்பிழைப்புக்கு வழி காட்டிக்கொடுத்தா நல்லதுங்க.

1 comment:

Voice on Wings said...

//இருள் தரும் வெளிச்சம்...//

முரண்பாடு முகத்தில் அறைகிறது.