Tuesday, May 13, 2008

யாழ் மாணவன் என்றால் அகதியா?

வடக்குப் போர் முனை சூடுகண்டுள்ளதை நாம் நன்கறிவோம்। துப்பாக்கிச் சத்தத்துக்கு அடங்கிப்போய் பாடசாலைக்குச் செல்லாமல் பள்ளி வாழ்க்கைக்காக ஏங்கித்தவிக்கும் சிறுவர்கள் ஏராளம் என்பதும் எமக்கு நன்றாகத் தெரியும்।
இந்நிலையில் பிள்ளைகளை எப்படியாவது படிப்பிக்க வேண்டும் என்ற தாகத்துடன் அங்கிங்கு கடன்பட்டு கொழும்புக்கு அழைத்துவருகின்றனர் பெற்றோர்। கொழும்புக்கு வருவதென்றால் விமானப் பயணம் தான்। ஒருவழிப் பயணத்துக்கு ஒருவருக்கு १०,००० ரூபா செலவாகிறது। அத்துடன் அங்கு ஆள் அடையாளப்படுத்தி உறுதிப்படுத்துவதற்கு பல்வேறு ஆவணங்கள் பெறவேண்டும்।
இப்படி கஷ்டப்பட்டு பிள்ளைகளை கொழும்புக்கு அழைத்து வந்து படாத பாடுபட்டு பாதுகாப்புப் பிரச்சினைகளுக்கு மத்தியில் வாடகை வீடு தேடி வீட்டு உரிமையாளர்களின் தகாத கேள்விகளுக்கு (சொந்த இடம் யாழ்ப்பாணம் என்றால் வேற்று கிரக வாசியைப் போல சந்தேகத்துடன் பார்ப்பது வழமை) அழுகையைக் கட்டுப்படித்தி பதில் கூறி சாதாரண வாழ்க்கைக்கு திரும்புவதற்கு ३ மாதங்கள் கழிந்துவிடும்।
பின்னர் பிள்ளைகளைப் பாடசாலைக்கு சேர்ப்பதற்கோ பெருங்கஷ்டம்। யாழ் அரச அதிபரின் கையொப்பத்துடனான கடிதம் பெற்று அங்குள்ள பொலிஸ் உயரதிகாரி அதனை உறுதிப்படுத்தி இராணுவத்தினர் அதனை சரிபார்த்துதான் கடிதம் இங்கு வரும்।
இருந்தாலும் பாடசாலையில் சேர்ப்பதற்கு பிரத்தியேக பணமும் செலுத்தவேண்டி வருகிறது। இவை அத்தனையும் செய்துமுடித்து பிள்ளையைப் பாடசாலைக்கு சேர்க்கும் போது சுமார் எட்டு மாதங்கள் பிள்ளையின் கல்வி பின்னடைவைச் சந்தித்திருப்பதுடன் தந்தைக்கு தலைமயிர் பாதி கொட்டியிருக்கும்।
சரி விதிதான் அப்படி விளையாடுகிறது என்றால் சில பாடசாலைகளில் இவ்வாறு சேர்ந்த மாணவர்களை அகதி என்று கூறிப் புண்படுத்தும் ஆசிரியர்களை என்னவென்று கூறுவது? ஆசிரியத் தொழில் புனிதமானது। ஓர் ஆசான் இறைவனுக்கு சமன் என இந்துமதம் கூறுகிறது।

கொழும்பிலுள்ள ஒரு பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் தனது வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருக்கும் போது அகதியாக கொழும்புக்கு வந்தவர்கள் எத்தனை பேர் எனக் கேட்டிருக்கிறார்। நீங்கள் வகுப்புக்கு ஆறு மாதத்தின் பின்னர் சேர்ந்ததால் ஒழுங்காக பாடம் விளங்குவதில்லை என்று சொல்லியிருக்கிறார்। அது பிரச்சினையில்லை। இங்கு அகதி என்ற சொல் எதற்காக உபயோகிக்கப்பட வேண்டும்? நாங்கள் அகதிகளா என அந்தப் பிஞ்சுப் பிள்ளை தன் பெற்றோரிடம் கேட்டபோது அவர்கள் அடைந்த வலி யார் உணர்ந்திருக்கிறார்கள்? சக மாணவர்கள் அகதி அகதி என விளையாட்டாக அழைக்கும் போது பிள்ளையின் மனம் கொள்ளும் ரணத்தை ஆற்றப்போகும் மருந்துதான் என்ன?
கொழும்பு பாடசாலைகளில் சேர்க்க முடியாமல் ஒருவருடம் பின்னின்று கீழ் வகுப்பில் கல்வி கற்கும் நிறைய மாணவர்கள் இருக்கிறார்கள்। எவ்வாறிருப்பினும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மாணவர்கள் நடத்தப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது। போர்ச்சூழலில் பாதிக்கப்பட்டவர்கள் இப்படியும் துன்புறுத்தப்படவேண்டுமா?
சம்பந்தப்பட்டவர்கள் இதனை உணர வேண்டும்। மாணவர்களுக்கு சிறுவயதில் ஏற்படும் துளியளவு மனக்காயம் கூட எதிர்காலத்தை வீணடித்துவிடும் என்பதை அறியவேண்டியது அவசியம்.

Friday, May 9, 2008

தமிழர் தலைவிதியை தீர்மானிக்கும் நாள் நாளை !

இலங்கையின் ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்களினதும் வாழ்வு நிலையையும் சுதந்திரத்தையும் தீர்மானிக்கும் நாள் நாளையாகும் விடுதலை,சுதந்திரம்,உரிமைகள் என்பன தமிழர்களுக்கு இருப்பதாகவும் அது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பறிக்கப்படவில்லை என்றும் கூறிக்கொள்ளும் அரசியலாளர்களுக்கு தமிழர்கள் நாளை கொடுக்கப்போகும் பதில்தான் என்ன?

ஆம்! இரண்டு தசாப்த காலத்துக்குப் பிறகு கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நாளை १० ஆம் திகதி நடைபெறுகிறது। முழு இலங்கை வாழ் தமிழ்பேசும் மக்களின் எதிர்காலத்தையும் இத்தேர்தல் தீர்மானிக்கப்போவது உண்மை.

வன்முறைக்களம் என்றும் தேர்தல் அட்டூழியங்களுக்கும் களவாடல்களுக்கும் இடம்தந்து நடைபெறப்போகும் தேர்தல் என்று இலங்கை எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்ட ஜனநாயகத்துக்காக தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமையை பெற்றுக்கொடுப்பதற்காக ஜனநாயக ரீதியில் நடைபெறப்போகும் நியாயமான தேர்தலாக இருக்கும் என்று அரச தரப்பும் , வன்முறைகளைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தவறிவிட்டது ஆயுதக்குழுக்களின் அச்சுறுத்தல்கள் மக்களுக்கு உள்ளன என்று தேர்தல் கண்காணிப்பாளர்களும் ,அரச ஊழியர்கள் ५०० பேரை தேர்தல் உதவிக்காக அரசாங்கம் அமர்த்தியுள்ளது என அரச அதிருப்தியாளர்களும் கூறிவரும் நிலையில் நாளைய தேர்தல் இடம்பெறவிருக்கிறது।

இலங்கையின் கிழக்குப் பகுதி இயற்கை அழகு நிறைந்தது। மக்களும் அளவில்லா அன்புள்ளம் படைத்தவர்கள்। இனத்தை இனத்தால் அழித்து மக்கள் வாழ்வியலையும் வாழ்வாதாரத்தையும் சீர்குலைத்த போர்ச்சூழலின் இரத்தம் தோய்ந்த வரலாறு அந்த மக்களின் ஒட்டுமொத்த உணர்வலைகளையும் உயிருடன் பிடுங்கி எறிந்தது।

போர் காரணமாக இடம்பெயர்ந்து கால்வயிறு சோறுக்குக் கூட காலைப்பிடிக்கும் நிலைக்கு மட்டக்களப்பு திருகோணமலை மக்கள் தள்ளப்பட்டிருந்த போது இலங்கை இதழியல் கல்லூரியினால் நான் மட்டக்களப்புக்கு அனுப்பப்பட்டேன்।

கைகழுவ தண்ணீர் இல்லை,உடுதுணியில்லை,உணவில்லை என்றிருந்த போதும் மாமாங்கர் ஆலய முகாமிலுள்ள வயதான அம்மா எனக்குச் சோறூட்டிய நினைவு இன்னும் கண்ணை நனைக்கிறது। அந்தளவுக்கு அன்பானவர்கள் அவர்கள்।

எந்தப் பிழைக்கும் துணைபோகாமல் எந்தப் பிணியையும் தாங்கிக் கொண்டிருக்கும் இவர்களை பகடைக்காய்களாகப் பயன்படுத்தி சர்வதேசத்துக்கு படம்காட்ட முயலும் சக்திகளுக்கு பாடம் புகட்டக் கூடிய நிலையில் மக்கள் இல்லை என்பது தெளிவு।

ஒரே நோக்கம் எனக் கூறும் தமிழர்களே பிளவுபட்டு தேர்தல் களத்தில் குதித்திருக்கிறார்கள்। நியாயத்துக்காக எனக் கூறி முஸ்லிம்கள் பிளவுபட்டு போட்டியிடுகிறார்கள்।

ஓர் இனத்தவர்களே தம் இனத்தவர்களை காட்டிக்கொடுக்கிறார்கள்। தன் இரத்தத்தையே அது சார்ந்த இன்னொரு இரத்தம் குடிக்கிறது। தன் மொழியையே அதுசார்ந்த மற்றொரு மொழி கொல்கிறது। யாரிடமும் சொல்லி அழ முடியாமல் தலையணை நனைத்து அமைதியாக அடங்கிப்போனவர்கள் எத்தனை பேர்? தமிழ் வளர்த்து கலை வளர்த்து கல்விமான்களையும் கலாசார காவலர்களையும் முன்னுதாரணதாரர்களையும் உருவாக்கிய கிழக்கு களையிழந்து காணப்படுவதற்கு யார் காரணம்?

உதயசூரியனுக்காக காத்திருந்த போது குண்டுவிழுந்து கண்ணையிழந்தவர்கள் எத்தனை பேர்? பார்க்கும் தூரத்தில் பள்ளியிருக்க பட்டாம்பூச்சியாய் பள்ளிக்குச் சென்று கருகிப்போன பிஞ்சுகள் எத்தனை? யுத்தச் சத்தத்தில் மனநோயாளியாகியோர் எத்தனை பேர்? வெறிபிடித்த இன விஷமிகளின் காமக் கரங்களால் மானபங்கப்படுத்தப்பட்டோர் எத்தனை பேர்? வாழ்ந்தும் மரணித்துக்கொண்டிருப்போர் எத்தனை பேர்? சொந்தங்களை சுற்றங்களை இழந்து எதிர்காலத்தை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருப்போர் எத்தனை பேர்?

இத்தனை கேள்விகளுக்குள்ளும் சுமை தாங்கிகளாய் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்குள் மக்கள் சேவகர்கள் நாளை தேர்ந்தெடுக்கப்படப் போகிறார்கள்। தமிழர்களே அதிக பிரிவினைவாதத்துடன் கிழக்கில் நடந்துகொண்டிருக்கிறார்கள்। இந்நிலையில் அப்பாவி மக்கள் என்ன செய்யப் போகிறார்கள்?
இந்தக்கட்டுரை யாரையும் காயப்படுத்துவதற்காகவோ அரசியல் பின்னணியுடனோ எழுதப்படுவதல்ல। சொந்தங்களுக்காக எழுதுகிறேன்।
எனது வேண்டுகோள் இதுதான்। மக்களை துன்புறுத்தி பலவந்தப்படுத்தாமல் சுயமாக வாக்களிக்க விடுங்கள்। அவர்களுக்குத் தெரியும்। யார் உண்மையானவர்கள் என்று। சுதந்திரமான தேர்தல் நடத்த அனைவரும் ஒத்துழையுங்கள்। அதைவிடுத்து தமிழ்பேசும் மக்களை காட்டிக்கொடுக்கும் வரலாற்றுத் தவறுக்கு இடமளிக்க வேண்டாம்।
இதுவரை அந்த மக்கள் பட்ட துன்பங்கள் போதும்। தொடர்ந்தும் அவர்கள் பகடைக்காய்களாக பயன்படுத்தப்படக்கூடாது என்பதே எனது தாழ்வான வேண்டுகோள்.

Wednesday, May 7, 2008

கொழும்பு ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் !!! (படங்கள்)






இலங்கைத் தலைநகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று காலை வெகு கோலாகலமாக இடம்பெற்றது। காலை ५ மணிமுதல் கிரியைகள் இடம்பெற்றதுடன் ६.३२ மணிமுதல் சகல விமானங்களுக்கும் அபிஷேகம் இனிதே நடைபெற்றது।

கடந்த २ ஆம் திகதி கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேகக் கிரியைகள் ஆரம்பமாயின।

எங்கும் எதற்கும் எதிலும் ஆட்படாத சக்தி சிவம்। இந்நிலையான்,இவ்வண்ணத்தான்,இப்படியிருப்பான், இக்குணமுடையான்,இவ்வருளுடையான்,இப்பேருடையான் எனச் சொல்ல முடியாதவனுக்கு அநேகனாகி முடிவிலா வியாபகன்। அருட்சக்தி நிறைந்த சிவன் ஆன்மாக்களுக்காக படியிறங்கி அருள்பாலிக்கும் இடம் ஆலயமாகும்। தலைநகர் கொழும்பிலுள்ள சிவாலயங்களில் புகழ்பெற்ற இவ்வாலம் பழமை வாய்ந்த தலவரலாற்றைக் கொண்டது।

(ஆலய வரலாற்றின் பின்னர் இன்று நடந்த கும்பாபிஷேகத்தின் படங்கள்। படங்களைத் தந்து உதவிய அன்பு நண்பருக்கு நன்றிகள்)
ஸ்ரீ பொன்னம்பலவாணேசர் ஆலய தல வரலாறு :
தென்னிந்தியாவில் உள்ள பிரம்மாண்டமான கருங்கல் ஆலயங்கள் யாவும் மூவேந்தராலும் நாயக்க பல்லவ மன்னர்களாலுமே கட்டப்பெற்றது. அதேமாதிரியான அமைப்பில் இலங்கையில் முற்றிலும் கருங்கற்களில் பொளிந்த சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த அழகிய கலைக்கோவிலை 1856ஆம் ஆண்டு் யாழ்ப்பாணம் மானிப்பாயில் பிறந்து கொழும்பு செட்டியார் தெருவில் வசித்து வந்த கொடைவள்ளலும் தேசபிமானியுமான பொன்னம்பலம் முதலியாரால் ஸ்தாபிக்கப்பட்டது. பின்னர் அவரது புதல்வர் சேர் பொன் இராமநாதன்இ ஸ்ரீ பொன்னம்பலவாணேசர் கோயில் எழுந்தருளிய இடத்திலே புதியதொரு கோயிலை 1907 ஆம் ஆண்டு கருங்கற் பணியாக ஆரம்பித்து 1912 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் திகதி கும்பாபிஷேகம் செய்வித்தார்.
மூலஸ்தானத்தில் ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் வீற்றிருக்க சிவகாமி அம்பாள் - அம்பாள் சந்நிதானத்தில் வீற்றிருந்து அருள் பாலிக்கின்றாள். நடராஜர்இ மூலப் பிள்ளையார், சோமஸ்கந்தர், பஞ்சலிங்கம், விஷ்ணு, சுப்பிரமணியர், ஷண்முகர், பைரவர், சுவர்ண பைரவர், நவக்கிரகம் ஆகியோருக்குத் தனித்தனி ஆலயங்கள் உள. கோஷ்டத்தில் நர்த்தன கணபதிஇ தட்சணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை முதலானோர் வீற்றிருக்கின்றனர். சனீஸ்வரன் தனியாக வீற்றுள்ளார்.
வெளிவீதியில் கோவிலின் முன்னே நர்த்தன கணபதியும்இ தென்புறத்தே ஸ்ரீ மாரி அம்மன், ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீமுனியப்பர் ஆகியோர் தனி ஆலயங் கொண்டுள்ளனர். வடக்கே கோமாதாவின் கோகுலம் உள்ளது.
நித்தியஇ நைமித்திய பூசைகளும் ஆறு காலப் பூசைகளும் விரதங்களும்இ அபிஷேகங்களும்இ பொங்கல்களும் குளிர்ச்சி போன்றவையும் சிவாகாம முறைப்படி நடைபெற்று வருகின்றன. ஆலய மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பித்து பத்தாம் நாள் பங்குனி உத்தரத்தன்று நிறைவு பெறும். தேர்த்திருவிழா அன்று சோமாஸ்கந்தர்இ அம்பாள்இ சண்டேஸ்வரர் தம் தம் அழகிய சிற்பத் தேர்களிலும் விநாயகர்இ முருகன் தம் வாகனங்களிலும் ஆரோகணித்து வீதி வலம் வருவர். அம்பாளின் தேரைப் பெண்களே இழுப்பது வழக்கம். சுவாமி வெளிவீதி வரும்பொழுதில் நவசந்தித் திருமுறைகள் ஓதப்படுகின்றன. அதிகாலையில் திருப்பள்ளியெழுச்சிப் பராயணத்துடன் பூசைகள் ஆரம்பமாகின்றன. காலை 7:00 மணிக்கும் மாலை 7:00 மணிக்கும் நடைபெறும் பூசையில் நித்தியாக்கினி வளர்க்கப்படும்.
ஆடிப்பூரத்தை அந்தமாகக் கொண்டு ஸ்ரீ சிவகாம சௌந்தரி அம்பாளுக்கு லட்சார்ச்சனை, விசேஷ ஹோமம் என்பன நிகழ்ந்து வருகின்றன. நவராத்திரி காலத்தில் விசேடஷ கொலுபூஜை, ஸ்ரீ சக்ரபூஜை என்பன நடைபெறுகின்றன. நவராத்திரிகால மாலைப் பூஜையைத் தொடர்ந்து ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வர தேவஸ்தானத்தில் அறநெறிப்பாடசாலை இடம்பெற்றுவருவதும் குறிப்பிடத்தக்கது. தமது குஞ்சிதபாதத்தால் அருள் நல்கும் ஸ்ரீ நடராஜப் பெருமானின் அபிஷேக தினங்கள் அபிஷேக பூஜைகளுடன் சிறப்புற இடம்பெறுகின்றன.

Friday, May 2, 2008

ஓர் ஊடகவியலாளர் சொல்லும் கதை...!

இலங்கையின் குளிர்ச்சியான பகுதியிலிருந்து சூடான வானலைக்கு செய்தி வழங்கும் பிரதேச ஊடகவியலாளர் ஒருவரை அண்மையில் துரதிர்ஷ்டவசமாக சந்திக்க நேரிட்டது। நான் என்ற அகங்காரம் இதுதானோ என வியக்கும் அளவுக்கு தற்புகழ்ச்சியுடன் தன்னையறியாமல் எல்லாவற்றையும் அள்ளிக்கொட்டினார்। தனது செய்திப் பிரதேசத்தில் அரசியல்வாதிகள் சிலருக்கு வக்காளத்து வாங்குவதற்காகவும் சுயலாபத்துக்காகவும் தான் செய்தி அனுப்புவதாக அவரே சொன்னார்.
அவர் சொன்னதை அவ்வாறே (சிவவற்றைத் தவிர்த்து) தருகிறேன்।

நாங்க செய்றது ஊடகத்தொழில் அல்ல। நாங்க ஊடகவியலாளர் அல்ல। நாங்க நியூஸ் புரோக்கர்ஸ்। அதாவது செய்தி தரகர்கள்। ஊடகவியலாளராயிருந்தா நடுநிலைமை இருக்கும்। நாங்க எங்கள முதல்ல பார்க்கனும்। நான் செய்தி அனுப்புற ஸ்டேஷன்ல எல்லாரோடயும் தண்ணி அடிச்சிருக்கேன்। என்ன செய்தியென்டாலும் போடுவாங்க। இப்போ கிட்டத்தில எங்கட பகுதியில பட்டாசு வெடிக்கவச்சு கோலகலமா ஒரு விஷயத்தை காட்டனும் னு சொன்னாங்க।

நான் என்னோட சொந்தக் காசில பட்டாசு வாங்கி ரெண்டு நண்பர்கள போடச்சொல்லிட்டு நேரடியா தொகுத்து வழங்கினேன் எப்படித் தெரியுமா? இங்க மக்கள் எல்லாரும் சந்தோஷமா வரவேற்கிறதுக்காக திரண்டு வந்து சுமார் १०० இற்கும் அதிகமானோர் பட்டாசு கொளுத்தி பாட்டுப்பாடி குதூகலிக்கிறதா சொன்னேன்। முழு இலங்கையும் நம்பிடுச்சி।( இன்னும் நிறைய விஷயம் சொன்னார்।)
சுமார் அதிகாலை १.३० மணியிருக்கும்। ஒரு பிரபலமான (எனக்குப் பிடித்த,தரமாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும்) அறிவிப்பாளரை கையடக்கத் தொலைபேசியில் அழைத்து, பாருங்கள் இங்கு யாருக்காவது இந்த நேரத்தில் இவருக்கு அழைப்பினை ஏற்படுத்த முடியுமா என இராஜதோரணையில் சத்தமிட்டார்। அந்த வானலை சேவையிலுள்ள பலருக்கு பல விடயங்களை கற்றுக்கொடுத்ததும் தான்தான் எனச் கர்ஜனைத் தொனியில் கூறினார்। இத்தனைக்கும் அந்த இடத்தில் பிரச்சினை ஒன்றும் நடக்கவில்லை।

ஊடகவியலாளர்கள் மக்களுக்கானவர்கள்। மக்கள் நேசகர்கள்। இவ்வாறான அரசியல் ஒட்டுண்ணிகளால் ஊடகத்துறையே கலங்கமடைகிறது। அதுவும் தனது புனிதமான தொழில் நிலையையும் தனது தொழில்தாபனத்தையும் பகிரங்கமான தாழ்விறக்கும் இவ்வாறானவர்கள் ஊடகத்துக்குத் தேவைதானா?

இவர் சொல்லும் வானலைச் சேவை சிறப்பான சேவையை இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கி வருகிறது। நேயர்கள் விரும்பும் நிகழ்ச்சிகளை கவரும் விதத்தில் தொகுத்து வழங்குகிறார்கள் அறிவிப்பாளர்கள்। இந்நிலையில் சுயதம்பட்டம் அடித்து இழிநிலை ஊடகத்துக்கு வழிகோலும் இவ்வாறானவர்களை ஒதுக்கி தூரப்படுத்தி சமுதாயத்தை தூய்மைப்படுத்த வேண்டும்.

Monday, April 21, 2008

எங்கள் ஊர்த் திருவிழா!!! (படங்கள்)





இறக்குவானை சிறீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா சிறப்பாக இடம்பெற்றுவருகிறது। மகோற்சவத்தின் பிரதான அங்கமான இரதபவனியின் போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு தந்துள்ளேன்। கடந்த சனிக்கிழமை இரதபவனி இடம்பெற்றது।
இறக்குவானை இளைஞர்கள் நாம் ஒன்றிணைந்து ஒவ்வொரு வருடமும் சப்தம் விசேட ஒலியலைச்சேவையை திருவிழா காலத்தில் செய்வதுண்டு। இறக்குவானையிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் மகோற்சவ காலங்களில் சப்தம் எப்।எம் தான் வானொலிகளில் தவழும்। ஆனால் இவ்வருடம் பேரினவாதிகளின் சதியால் எமக்கு அந்த வானொலிச் சேவையை செய்ய முடியவில்லை। அந்தக் கவலையைத் தவிர திருவிழா சிறப்பாக நடைபெற்றது। இது தொடர்பான எனது கட்டுரையை வெளியிட்ட வீரகேசரி ஆசிரிய பீடத்துக்கு எனது நன்றிகள்।
( எமது ஆலய திருவிழா பற்றிய வீரகேசரியில் கடந்த १९ ஆம் திகதி பிரசுரமாகிய கட்டுரையை இங்கு தருகிறேன்)

இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய தேர்பவனி இன்று

இரத்தினபுரியின் இரத்தின நகரம் என்றழைக்கப்படும் இறக்குவானையில் எழுந்தருளி அருள்பாலித்து சர்வ வளங்களையும் அள்ளி வழங்கிக்கொண்டிருக்கிறாள் அன்னை அகிலாண்டேஸ்வரி. அன்னை என்று அருள்வேண்டி வருவோருக்கு இன்னல் தீர்க்கும் இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் வீற்றிருக்கும் அம்பிகைக்கு மகோற்சவப் பெருவிழா சிறப்புடன் நடைபெற்று வருகிறது. கடந்த 10 ஆம் திகதி வியாழக்கிழமை கணபதி ஹோமத்துடன் ஆரம்பமாகிய மகோற்சவப் பெருவிழா தொடர்ந்து இடம்பெற்று வருவதுடன் மகோற்சவத்தின் பிரதான அங்கமாகிய தேர்பவனி இன்று சனிக்கிழமை இடம்பெறுகிறது.
வேறுபட்;ட குணங்களுடைய ஆன்மாவை நன்முறையில் நெறிப்படுத்தி, தீய குணங்களினின்று நீக்கி, அன்பு அறம் அருள் நிறைந்ததாக்கும் தத்துவமே சமயமாகும். சமயத்துக்கு ஆற்றுப்படுத்தல் என்றொரு வியாக்கியானப் பொருளும் உண்டு. அன்பின் வழியாக ஆன்மாவை ஆற்றுப்படுத்தும் சமயங்களில் காலத்தால் முற்பட்டது இந்து சமயம். ஆன்மாவை அஞ்ஞான வழியிலிருந்து அகற்றி து}ய்மைத்தன்மையை அருளுடன் வழங்கும் இந்து சமயத்தில் ஆலயங்கள் இன்றியமையாதன. ஆன்மாவை லயப்படுத்தும் ஆலயங்களில் ஆன்மாக்களின் ஈடேற்றத்துக்காகவே பல்வேறு கிரியைகள் இடம்பெறுகின்றன.
ஆலயங்களில் தினந்தோறும் நடைபெறும் கிரியைகள் நித்தியக்கிரியைகள் என்றும் விசேட காலங்களில் நடைபெறும் கிரியைகள் நைமித்தியக் கிரியைகள் என்றும் கொள்ளப்படுகின்றன. நைமித்தியக் கிரியைகளில் சிறப்புடன் குறிப்பிடப்படுவது மகோற்சவப் பெருவிழாவாகும். உற்சவங்களில் மகோன்னதமானதும் விழாக்களில் பெரியதாகவும் பெயர்பெற்ற மகோற்சவங்கள் கொடிமரம் உள்ள அனைத்து ஆலயங்களிலும் முக்கியத்துவம் பெறுகின்றன.
இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலும் இந்தப் பெருவிழா வருடந்தோறும் சிறப்பாக நடைபெறுவது வழமையாகும். வுpழாவின் ஆரம்பமாக துவஜாரோகணம் எனப்படும் கொடியேற்றத் திருவிழா கடந்த 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. உலகமாகிய பந்தத்திலிருந்து ஆன்மாவை விடுவித்தி இறைவன்பால் சேர்த்து இன்பம் அனுபவிக்கும் உயிர்நிலைத் தத்துவத்தை விளக்கும் இக்கிரியையில் பெரும்பாலானோர் கலந்து கொண்டிருந்தனர். அதனைத் தொடர்ந்து அம்பிகைக்கு தினமும் விசேட பூஜைகள் இடம்பெற்று வந்ததுடன் நேற்று வெள்ளிக்கிழமை மாலை வேட்டைத்திருவிழாவும் அதனைத் தொடர்ந்து இரவு சப்பரத்திருவிழாவும் இனிதே நிறைவுபெற்றன.
இறைவனின் ஐந்தொழில்களையும் அதன் தத்துவங்களையும் விளக்கும் கிரியையாகவே மகோற்சவங்கள் ஆலயங்களில் நடைபெறுகின்றன. இதில் சிறப்புப் பெறுவது தேர்பவனியாகும். இறைவனின் அழித்தல் தொழிலைக் குறிக்கும் தேர்பவனி இன்று நண்பகல் 12 மணிக்கு இடம்பெறுகிறது. சர்வலோக நாயகியான அன்னை அம்பிகை சர்வ அலங்கார நாயகியாக வீற்று தேரில் ஆரோகணித்து அடியார்களுக்கு அருள்பாலிப்பதற்காக வீதியுலா செல்கிறாள்.
சிவனில் பாதியாகி இயக்கத்துக்குக் காரணமாகி நாடிவருவோருக்கு நயம்,நலம் தரும் அம்பிகைக்கு மணிமகுடம் சூட்டி ஆலய வாசலில் கடவுளர்கள் தேவர்கள் ரிஷிகள் குங்குமம் சூட்டி ஆசிர்வதிக்க நாயகியவள் நகர்வலம் வருகிறாள். அதனைத் தொடர்ந்து இரவு அம்பிகைக்கு குங்குமார்ச்சனை இடம்பெறுவதுடன் அடுத்துவரும் நாட்களில் பூங்காவனத் திருவிழா, தீர்த்தத்திருவிழா, கொடியிறக்கத் திருவிழா ஆகியன நடைபெற்று எதிர்வரும் 22 ஆம் திகதி வைரவர் மடையுடன் மகோற்சவம் இனிதே நிறைவடையும். திருவிழாவின் அனைத்துக் கிரியைகளும் இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பிரதம குரு பிரம்மஸ்ரீ மகேந்திர குருக்களின் தலைமையில் இடம்பெறுகின்றன.
இந்துமதம் மட்டுமே இறைவனை தயாகவும், தந்தையாகவும், தலைவனாகவும், தோழனாகவும், தான் விரும்பிய எந்த வடிவத்திலும் வணங்கும் சுதந்திரத்தை தந்திருக்கிறது. இந்நிறத்தான் இவ்வண்ணத்தான், இப்படியிருப்பான், இன்ன குணங்கள் உடையான், இன்ன நிலையில் இருப்பான் என்று சற்றேனும் குறிப்பிட்டுக் கூற முடியாமல் இருக்கும் இறைவன் ஆன்மாக்களுக்கு இறைமோட்சம் கிடைக்க கீழிறங்கி வந்து உருவம் கொண்டு அனைத்துமாகி அருளாட்சி நடத்தும் இடமே ஆலயம். சகலரும் தன்முன் பொதுவெனக் காட்டும் ஆலயத்தில் நடைபெறும் கிரியைகள் அனைத்துமே பொருள் தருவன, தத்துவம் உடையன.
நான் என்ற அகங்காரமும் எனது என்ற மமகாரமும் நிறைந்த ஆணவ இருள் மலத்தை அருள் என்னும் ஒளியால் அகற்றும் தத்துவமே தேர்பவனியின் பொருளாகும். அதுமட்டுமன்றி ஊர்த்து}ய்மை, ஊரவர்களின் ஒற்றுமை, சேர்ந்து செயற்படும் தன்மை, அனைவரும் அன்னையின் நிழலில் ஒடுங்கும் நிலையை நெறியெனக் கூறும் இப்பெருவிழா சமய சடங்குகளில் தனித்துவம் நிறைந்தது. ஆகவே அம்பிகை அடியார்கள் து}ய ஆசார சீலர்களாக ஆலயத்துக்கு வருகை தந்து எல்லாம் வல்ல அன்னை அம்பிகையின் அருளைப் பெற்று சிறப்புப் பெறுவீர்களாக.
- இறக்குவானை நிர்ஷன்

நன்றி வீரகேசரி

Friday, April 4, 2008

விஷம் கறக்கும் பசுக்களுக்கு ஒரு வேண்டுகோள்!!!

எனது வலைத்தளம் அரசியல் இலாபம் கருதியோ சுயலாபம் கருதியோ செய்யப்படும் ஒன்றல்ல। யாராவது தவறாக புரிந்துகொண்டிருந்தால் தயவு செய்து என்னிடம் கேளுங்கள்। அதைவிடுத்து எனக்கு எதிரான கேவலப் பிரசாரங்களில் ஈடுபடவேண்டாம் எனத் தாழ்மையுடன் வேண்டுகிறேன்।
இது ஒரு வலைப்பதிவே தவிர இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட ஓர் ஊடகமல்ல। நான் சுதந்திரமாக எனது கருத்துக்களை வெளியிடுகிறேன்।யார் மனதையும் புண்படுத்தவேண்டும் என்பது என்னுடைய நோக்கமல்ல।
என்னுடைய பதிவுகளில் தமிழர்களின் நலனைத்தவிர்த்து சுயலாபத்துடன் செயற்பட்டிருக்கிறேனா என்பதை என்மீது குற்றம் சுமத்தும் அரசியல்வாதிகள்,நபர்கள் சொல்லட்டும்। என்னிடம் நன்றாக கதைத்துப் பழகி வலைத்தளத்தைப் பற்றி பெருமையாகச் சொல்லும் சிலர் வெளியில் கேவலமாகப் பேசுவது உண்மையில் கவலையாக இருக்கிறது। பெரும்பாலான பதிவர்களின் பதிவுகள் சுயலாபம் கொண்டவையல்ல। என்னுடையதும் அவ்வாறே। பத்திரிகைத்துறையில் சில உண்மைகளை வெளிக்காட்டப் போய் எனக்கு ஏற்பட்ட பிரச்சினைகளால் உடைந்துபோய் முச்சடைத்து தமிழை சுவாசிக்க முடியாது குற்றுயிராக இருப்பதாக பேசுகிறீர்கள்।
ஆம்! ஊடகம் என்னும் என்னுடைய இலட்சியத்துறையில் சாதிக்கத்துடித்தபோது சிலர் சிரித்துக்கொண்டே என்னைக் கத்தரித்தார்கள்। நெருப்பால் சுடப்பட்ட புழுவாய் துடித்து அதனையே அந்த வேதனையையே ஆணிவேராய்க் கொண்டு எழுந்து நடந்தபோது உண்மையை வெளிக்காட்டுவதாய் பிரச்சினை। தமிழர்களே குழுக்களாய் பிரிந்திருந்து எனக்கு அபாய சமிக்ஞை எழுப்பிக்கொண்டிருந்தார்கள்। எனக்காகவல்ல என்சார்ந்தவர்களுக்காகத்தான் ஊடகத்துறையிலிந்து விலகுகிறேன் என்பது அவ்வாறானவர்களுக்கு புரிந்திருக்கும்।
ஆனால் அரசியல்சேவை என்ற பெயரில் சமுதாய இரத்தத்தை உறிஞ்சிக் குடித்து பசுத்தோல் போர்த்தி விஷம் கறக்கும் சிலரின் சுயலாப வெறிக்கு நான் பலியாக மாட்டேன்। நீங்கள் எந்த இடத்தில் யாருக்கு என்ன துரோகம் செய்தீர்கள் என்பதை ஆதாரத்துடன் வெளிப்படுத்தவும் பின்னிற்க மாட்டேன்। உங்களை நியாயப்படுத்துவதற்காக பக்கசார்பின்றி இயங்கும் ஊடகவியலாளர்களை அசிங்கப்படுத்தாதீர்கள்।
அரசியல்வாதிகளின் பின்னால் வால்பிடித்துத் திரியும் சில ஊடகவியலாளர்களும் இருக்கிறார்கள்।
அவர்கள் எனக்கிட்ட பின்னூட்டங்கள் இவை:

Anonymous said...
யேண்டா டுபாகூருங்களா... அவ அவன் நாட்டில வாழ்வா சாவான்னு தவிச்சுக்கிட்டிருக்கிறான்... உங்களுக்கு ஒவ்வொருத்தன்ட கோவணத்துக்குள்ளையும் நோண்டணும்னு அரிப்பா இருக்கு இல்ல...? முதல்ல உங்கடய அவுத்துப் பாருங்கடா எத்தன பீத்தல் இருக்குன்னு தெரியும்...


Anonymous said...
தம்பிஅதிகமாத்தான் பேசுறியள்।அடங்கலன்னா அடக்கிடுவோம்.


அனானி said...
//வாழ்வா சாவானு தவிச்சிட்ருக்கும்போது இதுவும் தேவைதானா தானய்யா நானும் கேட்கிறன்।//இப்பிடியெல்லாம் எல்லாரும் யோசிக்க ஆரம்பிச்சுட்டா மனித குல விருத்தி என்னாகிறது? வாழ்வோ சாவோ காதலும் கூடலும் அவசியம்ப்பா...கூடிக் குலவுறதுன்றது மனுஷ சுபாவம்... சைவருக்கும் சரி மற்றவையளுக்கும் சரி... ஆக, சிவராத்திரி தினத்துல புனிதமா இருக்கோணும் என்றதெல்லாம் சிவனத் தொழுறவங்களுக்கு மட்டும் தான்... நீங்க மட்டும் பெரிய உத்தமமோ? சிவராத்திரி முழிக்கப்போய்ட்டு சிவசிந்தனை இல்லாம அவசிந்தனையில தான் இருந்திருக்கிறீங்க... சிவராத்திரி அன்னிக்கு கோயிலில என்ன நடந்திச்சுன்னு ஒரு பதிவு போடத் தோணிச்சா? சும்ம போலீஸ் வேல பாத்துக்கிட்டு... டுபாகூருங்களா... மற்றது, தாந்திரீகத்தில எல்லாம் சிவனும் காளியும் உடலுறவு கொள்ளுற திருப்படங்கள வணங்குறாங்க தெரியுமா? காதலும் கடவுளும் ஒண்ணுப்பா... காதல் ஜோடிகள இப்படி காயுறதுதான் சிவத்துரோகம்... பரமசிவன்ல இருந்து அவர் பையன் முருகன் வரைக்கும் இந்த விசயத்துல கில்லாடிங்க தானே?


Anonymous said...
பேசாத வார்த்தை யாரையும் துன்புறுத்துவதில்லைதொடர்மௌனமும் எதுவித பயனையும் தரப்போவதில்லைகடமையை செய்வோம்உரிமையை பெற்றுக்கொள்வோம்தடையை தகர்த்தெறிவோம்-அதுமற்றவரின் தலையாய்இருந்தாலும்பரவாயில்லை!--------இது உங்களுடைய கவிதை। யதார்த்தத்துக்கு ஒத்துவராது என நினைக்கிறேன். எவ்வளவுதான் முயற்சி செய்யுங்கள். என்னதான் சொல்லுங்கள். சமுதாயத்தை திருத்த முடியாது. கடைசியில் நாடற்றவர்களாக வெளிநாட்டில் வசிக்க வேண்டிவரும்.நீர் பலதும் பேசுகிறீர்.விழலுக்கிறைத்ததாக கவலைப்படுவீர்.


எனது பதிவுகளில் எவையேனும் அரசியல்சாயம்பூசப்பட்டவை என எண்ணினால் சொல்லுங்கள்। மற்றும் இவ்வாறான பின்னூட்டங்கள் தருவதன் மூலமோ அல்லது கல்வியியலாளர்களின் சந்திப்பின்போதோ என்னைப்பற்றி தவறாக பேசி ஒன்றையும் சாதிக்க முடியாது என்பதை உணருங்கள்। என்னை முழுமையாக கவிழ்ப்பதற்கு மலையத்தைச் சேர்ந்த சிலரும் படாதபாடாய் உழைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும்। சம்பந்தப்பட்டவர்களுக்கு நான் எழுதியுள்ளவை அனைத்தும் புரியும் என நினைக்கிறேன்।

Monday, March 31, 2008

மெகா சீரியலால் சிறுமி தற்கொலை!!!

சின்னத்திரைகளில் ஒளிபரப்பாகிவரும் தொடர்நாடகங்கள் பல பிரதிகூலமான விளைவுகள் ஏற்படுத்தி வருவதை பலரும் பல்வேறு வகையில் தெளிவுபடுத்தி வந்தனர்। இந்நிலையில் அவர்களின் கூற்றை உண்மையாக்கும் முகமாக சிறுமியொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்।
தொலைக்காட்சி நாடகத்தில் இடம்பெற்ற தற்கொலைக்காட்சியை பார்த்துவிட்டு அதேபோல் தானும் முயற்சி செய்து சிறுமி தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இலங்கை,கொழும்பு பாலத்துறை பகுதியிலுள்ள 12 ஆம் இலக்கத் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது।ரிகாசா (வயது 12) என்ற முஸ்லிம் சிறுமியே இச்சம்பவத்தில் இறந்தவராவார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,சம்பவ தினமான சனிக்கிழமை மேற்படி சிறுமியின் பெற்றோர் தொழில் நிமித்தம் வெளியில் சென்றுள்ளனர். தனது பாட்டியுடன் வீட்டிலிருந்த சிறுமி வீட்டின் மேல்மாடியிலுள்ள தனது அறையில் விளையாடிக்கொண்டிருந்துள்ளார். அப்போது மாலை 4.30 மணியளவில் அங்குவந்த, சிறுமியின் மச்சாள் முறையான மற்றொறு சிறுமி மேல்மாடியின் அறைக்குச்சென்று பார்த்தபோது, குறித்த சிறுமி கழுத்தில் சுருக்கிடப்பட்ட நிலையில் கூரைக்கம்பியில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். இதனைப் பார்த்த மற்ற சிறுமி, அச்சத்தில் அலறியவாறு பாட்டியிடம் ஓடிச்சென்று கூறியுள்ளார். உடனடியாக சிறுமி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து கிராண்ட்பாஸ் பொலிஸார் விசாரணைகளைமேற்கொண்டு வருகின்றனர்.கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஒளிபரப்பான தொலைக்காட்சி நாடகமொன்றில் பெண்ணொருவர் சேலையினால் கழுத்தில் சுருக்கிட்டுக்கொண்டு தற்கொலைக்கு முயற்சிப்பதைப்போன்ற காட்சி படமாக்கப்பட்டிருந்ததாகவும் அதைப்பார்த்த குறித்த சிறுமி விளையாட்டுத்தனமாக அதேபோன்று செய்து பார்க்க முயற்சித்தவேளையே இவ்வாறு உயிரிழந்திருக்கலாம் என்றும் சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது. சிறுமி தான் அணிந்திருந்த துப்பட்டாவின் ஒரு பகுதியை சிறிய மேசையொன்றின் மேல் ஏறி தாழ்வாகக் காணப்படும் கூரைக்கம்பில் கட்டி மற்றைய பகுதியை தனது கழுத்தில் கட்டிக்கொண்டு மேசையிலிருந்து குதித்ததினாலேயே கழுத்துப்பகுதி இறுகி சிறுமி உயிரிழந்திருப்பதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து சிறுமியின் பாட்டியிடமும் சிறுமி தூக்கில் தொங்கியதை முதலில் கண்ட சிறுமியிடமும் பொலிஸார் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளனர். சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.சம்பவத்தை நேரில் கண்ட பயந்த நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது।

பெண்களை மையப்படுத்தியே சில தொடர்நாடகங்கள் இயக்கப்படுகின்றன। குடும்பச்சச்சரவுகளில் பெண்களே வில்லிகளாக சித்தரிக்கப்படுகின்றனர்। இதனால் வீடுகளில் தாய்மார்களைக் கூட பிள்ளைகள் எதிரியாகவே பார்க்கின்றனர் என்றால் தயாரிப்பாளர்கள் நம்பமாட்டார்கள்। நண்பரின் உறவினர் ஒருவரது வீட்டில் நடந்த சம்பவம் இது,
தாயார் சற்று தாமதமாக வர மகன் தாயைப்பார்த்துக் கூறுகிறான் இப்படி, எங்கடி அவனபார்க்கவா போயிட்டு வார?அவன் சோறுபோட்டு வளர்ந்த உடம்பா இது? எனக் கேட்டுள்ளான்। இதற்குக்காரணம் என்னவென்றால் இந்த வசனம் அப்போதுதான் தொலைக்காட்சி நாடகமொன்றில் ஒளிபரப்பாயுள்ளது। அதில் தாமதமாகிவரும் மனைவியைப் பார்த்துக் கணவன் கேட்கும் இக்கேள்வியை இங்கு மகன் கேட்கிறான்। இவ்வாறு நிறையவே சம்பவங்கள் உள்ளன। எதிர்மறை விடயங்களை காட்டுவதால் சிறுபிள்ளைகள் நியாயத்திலிருந்து விடுபட்டுச் செல்கிறார்கள்। அவ்வாறே இந்தச்சிறுமியின் உயிரும் பிரிந்துள்ளது। இதற்கு யார் பதில்சொல்லப்போகிறார்கள்???

Monday, March 10, 2008

சிவராத்திரியும் சிவத்துரோகமும்...! (மனித முகத்துடன் நாய்களின் அட்டகாசம்)

சிவனுக்கே உரிய தனித்துவமான விரதம்தான் சிவராத்திரி। மாதம்,பட்சம்,நித்தியம்,யோகம் என சிவராத்திரி அனுட்டிக்கப்பட்டாலும் மகா சிவராத்திரிக்கு தனி மதிப்புண்டு। மாயையாகிய உலகம் மகாசக்தியாகிய இறைவனிடத்தில் ஒடுங்கும் மகாபிரணய காலம் மகா சிவராத்திரியில் தான் வருகிறது। அதனால் இதன் தனித்துவம் மேலும் வலுவடைகிறது।
இவ்வாறிருக்க இலங்கையின் தலைநகரமாகிய கொழும்பில் சிவராத்திரி விரதம் சிறப்பாக அனுட்டிக்கப்பட்டது। ஆனாலும் வழமை போலவே இளசுகளின் லீலைகளும் மூலை முடுக்கெங்கும் அரங்கேறின। கடந்த ஆண்டு சிவராத்திரியின்போது கொழும்பில் இடம்பெற்ற காம வெறியாட்டங்கள் பற்றி மெட்ரோ நியூஸ் பத்தரிகையில் தகுந்த ஆதாரங்களுடன் எழுதியிருந்தேன்। அதற்காக வாசகர்களின் சூடான கருத்துப்பறிமாற்றங்களும் இடம்பெற்றன। அதேவேளையில் வெலியமுனை குருசாமி தினகரன் பத்திரிகையில் சில விடயங்களை தெளிவாகவே குறிப்பிட்டிருந்தததுடன் தினக்குரல் பத்திரிகையும் இந்தக் கீழ்த்தரம் குறித்து செய்தி வெளியிட்டிருந்தது।
என்னதான் ஊசியேற்றினாலும் உலக்கை நிலை மாறாததுபோல இந்தத்தடவையும் காம மழையில் நனைந்து காதல் நெருப்பில் குளிர்காய்ந்த நாயகர்களின் நிலையும் மாறவில்லை।
ஒருபுறம் பூசைநடைபெற மறுபுறம் பசை போல் ஒட்டிக்கொண்டிருந்தார்கள் காதலர்கள்। கொழும்பில் பிரசித்தி பெற்ற ஆலயங்களுக்கு அருகில் லீலைகள் அரங்கேறின। இலவச காட்சியாக கண்டுகளித்தனர் பலர்।
விவேகானந்தா மேட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் ஒன்றுக்குள் இரண்டு காதல் ஜோடிகள் சில்மிஷங்களில் ஈடுபட்டிருந்த போது வேறு இளைஞர்கள் தொந்தரவு செய்தனர்। கோபத்தில் காருக்குள் இந்த இளைஞன் ஒருவன் ஓடிவந்தான்। மேலாடை கூட இல்லாமல்!!! ( என்ன கொடுமை சார் இது?)
அதுமட்டுமல்ல இரவுக்காட்சி திரையரங்குகள் நிறைந்திருந்தன।
நல்ல வேளை முகத்துவார கடற்கரைக்கு பொலீசார் யாரையும் அனுமதிக்கவில்லை। இல்லையென்றால் கடலே சகிக்காமல் பொங்கியிருக்கும்॥
ஆள் நடமாட்டம் என்றுகூட பார்க்காமல் காதலியின் இடையை நசுக்கிப்பிடிப்பதும் காலநேரத்தை நோக்காமல் அவளும் அவனது உடலை வருடிவிடுவதுமாக தொடர்ந்த பல கதைகள் விடியும் வரையில் ஓயவில்லை। இதுபற்றி நிறைய எழுதலாம்। ஆனால் வலைக்கலாசாரத்தை மீறி வெறித்தனமாக எழுதக்கூடாது என்பதால் தவிர்க்கிறேன்। இந்த அனுபவங்கள் பலவற்றை நேரில் கண்டு சளித்துப்போன சமூக நலன்விரும்பியொருவரது தகவல்களை அடுத்த பதிவில் தருகிறேன்।( அவருடன் தொடர்புகொள்ள சற்றுத்தாமதமாகிறது)
சிவராத்திரியில் சிவத்துரோகம் செய்யும் இவர்களை அவனும் பார்த்துக்கொண்டுதானே இருந்திருப்பான்? நாய்தானே நடுவீதியில் செய்யும் என ஒருவர் அப்போது கூறியது இப்போது நினைவுக்கு வருகிறது।சரி,இந்த விஷமிகளின் சமூகத்துரோகத்துக்கு முடிவு கிட்டாதா? என்ன செய்யலாம் என்று பதிலுக்காக உங்களிடம் விடுகிறேன்।

Monday, March 3, 2008

தினக்குரல் வாரமலரில் எனது வலைப்பூ


இலங்கையில் வெளிவரும் தினக்குரல் பத்திரிகையில் வாராவாராம் பதிவர்களில் வலைத்தள அறிமுகம் இடம்பெற்றுவருகிறது। தாசன் அண்ணா எழுதும் இக்கட்டுரையில் நேற்று ஞாயிறன்று எனது புதிய மலையகம் வலைத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது।

பத்திரிகையை பார்த்தவுடன் பெரிதும் குதூகலம் கொண்டேன்। எனது வலைத்தளத்துக்கு ஆதரவு அளித்துவரும் பதிவர்களுக்கு பணிவுடன் நன்றிகூருவதுடன் அனைத்து நண்பர்களுடன் இதனைப் பகிர்கிறேன்। தாசன் அண்ணாவுக்கும் தினக்குரலுக்கும் நன்றிகள்।

Wednesday, February 27, 2008

இலங்கைப் பதிவர்களுக்கு பைத்தியமாம்...!

கொழும்பு வெள்ளவத்தை தமிழ்ச்சங்கத்துக்கு கடந்த சனிக்கிழமையன்று போயிருந்தேன்। வாசிகசாலைக்கு அருகில் இரண்டு பெரியவர்கள் ( பார்ப்பதற்கு அப்படித்தான் தெரிந்தது) வலைத்தளங்கள் பற்றி உரையாடிக்கொண்டிருந்தார்கள்। தவறென்று தெரிந்தும் காதுகொடுத்தேன்।
இளைஞர்கள் தமிழ்ச்சங்க நிகழ்ச்சிகளுக்கு பெரும்பாலும் வருவதில்லை என்ற வாதத்தின் தொடர்ச்சியாக இப்படி பேசப்பட்டது.

ஒருவர் : இப்போ புதுசா வலைப்பதிவர் என்று ஒரு கூட்டம் அலையுது। என்ன வேலை செய்றியள் என்று கேட்டால் நான் புளொக் செய்றன் என்று பதில் சொல்லுதுகள்

மற்றவர்: சண்டே தினக்குரல் பார்க்கிறியளே॥ புதுசா வலைப்பதிவராம் என்று அரைப்பக்கத்தை வீணடிக்கினம்। சாமிய கண்டா( தினக்குரல் அதிபர்) கேட்கவேணும்। அவனவன் சுயநலத்துக்காக புளொக் என்று வச்சுக்கொள்றான்। அதை தம்பட்டம் அடிக்கிறதுக்கு மற்றொரு கூட்டம்॥

ஒருவர்: எல்லாம் பைத்தியங்கள்... வேலையில்லாம நெட் நெட் என்று கஃபே ல உட்கார்ந்திட்டு நெட்ல கொப்பி பண்ணி புது விஷயம்னு போடுதுகள்... முருகானந்தன் ட கொஞ்சம் பார்க்கலாம்...

இதுவரை தான் என்னால் கேட்க முடிந்தது. இதற்கு மேல் கேட்டால் நான் பதில் சொல்ல வேண்டிவரும் என்பதால் அங்கிருந்து வந்துவிட்டேன். இருந்தாலும் இவர்களுடைய உரையாடல் எனக்குள் இனம்புரியாத கவலையை பிரசவித்தது. வெள்ளை உடையில் தன்னைத் தூய்மையானவர்கள் எனக் காட்டிக்கொள்ளும் இவர்களா இப்படிப் பேசுகிறார்கள் என்றும் எண்ணத் தோன்றியது.
இலங்கை பதிவர்கள் பலர் எத்தனை சிரமத்துக்கு மத்தியில் பதிவிடுகிறார்கள் என்பது யாருக்கு புரியப் போகிறது? ( தமிழ்ச்சங்க நிகழ்ச்சிக்கு அடுத்த முறை சென்றால் அந்தப் பெரியவர்கள் யாரென்பதை அறிந்து பெயருடன் தர முயற்சிக்கிறேன்).
மற்றும் பதிவர்களை அறிமுகப்படுத்துவதில் ஒரு பத்திரிகை முந்திக்கொள்ள அதனை ஏற்றுக்கொள்ள மனமில்லாத மற்றை பத்திரிகை ஊடகவியலாளர் ஒருவர் தனிப்பட்ட ஒருவரை அறிமுகப்படுத்துவது ஊடகதர்மத்தை மீறும் செயல் என்று விளக்கம் கூறுகிறார்। இப்படியெல்லாம் நடக்கிறது பாருங்கள்...
என்னதான் இருந்தாலும் வலைப்பதிவர்கள் நாம் இணைந்து ஆரோக்கியமான மாற்றத்தை உண்டுபண்ணுவோம் என்பது மட்டும் உண்மை।